விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் ஆல்பம் பாடல்கள், வெப் சீரிஸ் என்று நடித்து இருக்கிறார். ஆனால், இதற்கு முன்னாடி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்து இருந்தார். அதே போல ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற படங்களில் சிறு ரோலில் அஸ்வின் நடித்து இருக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இப்படி 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்தவர் அஸ்வின். இருந்தும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தான் அஸ்வின் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டும் இல்லாமல் இந்த சீசன் மூலம் இவர் பலரது மனதையும் கவர்ந்து இருக்கிறார்.

Advertisement

என்ன சொல்ல போகிறாய் படம்:

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல ஆல்பம் பாடல்களில் அஸ்வின் நடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘ஓ மனப்பெண்ணே’ படத்தில் செகண்ட் ஹீரோவாக அஸ்வின் நடித்து இருந்தார்.பின் இவர் முதன் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். இயக்குனர் ஹரிஹரன் தான் இந்த படத்தை இயக்கி இருந்தார்.

தோல்வியடைந்த முதல் படம் :

மேலும், இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக் வித் கோமாளி புகழ் என்று பலர் நடித்து இருந்தார்கள். ஆனால், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு கேலிக்கு உள்ளாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து அஸ்வினும் மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுத்து இருந்தார். மேலும், பல சர்ச்சைகளுக்கு பின் இந்த படம் வெளியாகி இருந்தது.

Advertisement

ஆனால், இந்த படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்து இருந்தது. இவருடைய பேச்சை கேட்டு பலரும் கோபமடைந்து இருந்ததே இதற்கு காரணம் என்றும் கூறி இருந்தார்கள். இந்நிலையில் அஸ்வின் பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று அஸ்வினின் திரை வாழ்க்கையை தக்க வைத்தது.

Advertisement

அஸ்வினின் அடுத்த படம் :

அதிலும் இந்த படத்தில் அஸ்வினின் நடிப்பும் பாராட்டைப்பெற்றது. செம்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படத்தின் இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் புதிய படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இந்த படம் ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது. மேலும், இந்த படத்தில் புகழும் நடிக்க இருக்கிறார்.

Advertisement