விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பானது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில்இருந்தது.

சொல்லப்போனால்இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான போது விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 4 நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

அதே போல போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.இதில் பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, ஷகீலா ஆகிய 4 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் கனி, டைட்டிலை தட்டி சென்றார். இவருடைய உண்மையான பெயர் கார்த்திக்காக. இவர் பிரபல இயக்குனரான அகதியனின் மகளாவார்.

மேலும், இவரது கணவர் திரு, தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியவர். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தகம் படிப்பது குறித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் அவருக்கு பின்னணியில் ஒரு மினி நூலகமே இருப்பது போன்று ஏராளமான புத்தகங்களை அவர் தனது வீட்டில் வைத்து இருக்கிறார். இந்த புத்தகத்தை எல்லாம் படித்து தான் சமையலில் டைட்டிலை அடித்தாரோ.

Advertisement
Advertisement