கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரே ஒரு விஷயம் இந்த கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே இன்று இந்தியா முழுவதும் அனைத்து மாநில அரசுகளும் பிரதமர் மோடி வேண்டுகோள் படி ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் பலரும் வீட்டிலேயே தங்களை தானே தனிமைபடுத்திகொண்டுள்ளனர். அதே போல பல்வேறு பிரபலங்களும் வீட்டில் இருந்தபடியே நடனம் ஆடுவது, பாடுவது, யோகா செய்வது என்று வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தே மு தி க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் வீட்டில் தனது குடும்பத்துடன் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் விஜயகாந்த். ஆனால், இடையில் இவருடைய உடல் நலக்குறைவு காரணமாக செய்ய முடியாமல் போனது. இவருக்கு எவ்வளவு சிகிச்சைகள் மேற்கொண்டது. ஆனால், இவரை பூரண குணம் செய்ய முடியவில்லை. பின் சிகிச்சைக்காக பல வெளிநாடுகளுக்கும் சென்றார்கள். ஆனால், அதுவும் பயன் அளிக்கவில்லை.
‘சாதாரண மனுஷனுக்கு தான் ஷாக்கடிக்கும், ஆன இந்த நரசிம்மாவ பார்த்த அந்த கரண்ட்டுக்கே ஷாக் கொடுக்கும்’ என்று வீரமாக இருந்த மனுஷனை இப்போது உடல் நிலை குன்றி பார்க்கும் போது கவலையாக உள்ளது என்று பலர் கூறுகிறார்கள். அந்த அளவிற்கு சினிமா உலகிலும், நிஜ வாழ்க்கையிலும் நல்ல பெயரை வாங்கியவர்.தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் விஜயகாந்திற்கு அவரது மனைவி பிரேமலதா பணிவிடை செய்து வருகிறார்.
அதுவும் ஷேவிங் செய்து விடுவது, டை அடிப்பது, பேடிகுயூர், மேடிகியூர் என்று அழகு நிலையத்தில் செய்யும் அத்தனையும் தனது கணவருக்கு செய்துள்ளார் பிரேம லதா. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர் ஒருவருக்கு பிரமாண்டமாக நடைபெற இருந்த திருமணம் எளிய முறையில் விஜயகாந்தின் வீட்டிலேயே நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.