“நான் டிராமல நடிச்சுட்டு இருந்த சமயம். 1974-ம் வருஷம் ‘கிரேட் பேங்க் ராபரி’னு ஒரு நாடகத்திற்காக எனக்கு பெஸ்ட் ஆக்டர் விருது கிடைச்சது. அந்த விருது வாங்கும்போதுதான் கமல்ஹாசனை முதன்முதலில் பார்த்தேன். எனக்கு அவரைத் தெரியும். ஆனா, அவருக்கு அப்ப என்னை யார்னு தெரியாது. இதுதான் எங்கள் முதல் சந்திப்பு.
அப்ப உள்ளே இருந்து யாரோ கூப்பிடற மாதிரி இருந்தது. முதல்ல எனக்கு சுடுகாட்டுக்குள் போகவே பயமா இருந்தது. அப்பதான் கமல் கூப்பிடறார்னு தெரிஞ்சது. உடனே ஓடிப்போய் அவரைப் பார்த்தேன். அப்ப நான் டிராமாவில் ஸ்கிரிப்ட் எழுதுறது, நடிக்கிறது, விகடன்ல எழுதுறதுனு நிறைய வேலைகள் பண்ணிட்டிருந்தேன். அது எல்லாமே அவர் தெரிஞ்சு வெச்சிருந்தார்.
அடுத்த நாள் காலையிலயே எங்க வீட்டுக்கு கமலோட கார் வந்தது. ‘சார், உங்களைக் கூப்பிட்டு வரச் சொன்னார்’னு சொன்னாங்க. உடனே கிளம்பி அவர் வீட்டுக்குப் போனேன். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்துக்கு நீங்கதான் வசனம் எழுதறீங்க என்று சொன்னார்.