டேனியல் பாலாஜி கண்கள் தானம் செய்யப்பட்ட காரணம் குறித்து அவரின் சகோதரர் கூறியுள்ளார். சமீப காலமாக சினிமா துறைகளில் பிரபலங்கள் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தான் பிரபல காமெடி நடிகர் சேஷு மாரடைப்பை காரணமாக உயிரிழந்த நிலையில் தற்போது மாரடைப்பு காரணமாக காலமாகி இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் டேனியல் பாலாஜி. இவர் படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார்.

இவர் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வட சென்னை போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து உள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்திலும், சூர்யாவின் காக்க காக்க படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு வில்லன் ரோல் செட் ஆகும் என்று யோசித்த கெளதம் மேனன், வேட்டையாடு விளையாடு படத்தில் இவருக்கு அமுதன் என்ற கொடூரமான சைக்கோ வில்லன் ரோலை கொடுத்தார்.

Advertisement

இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருந்த இவருக்கு அடுத்தடுத்து வில்லன் வாய்ப்புகள் வந்தது. குறிப்பாக வெற்றிமாறன் இவருக்கு பொல்லாதவன் மற்றும் வட சென்னை ஆகிய இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். இறுதியாக மித்ரன் ஜவஹர் இயக்கிய அரியான் படத்தில் நடித்து இருந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சில நாட்களில் குணமாகி வீடு திரும்பினார்.இப்படி ஒரு நிலையில் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. திருவான்மியூர் இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது வழியிலேயே இறந்து இருக்கிறார். அவருக்கு வயது 48. அவரது அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கம் வரதம்மல் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. 

Advertisement

மேலும், அவரது மறைந்த டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. அவர் இறந்த சில மணி நேரத்திலேயே அவரது கண்களை அவரின் விருப்பப்படி தனமாக கொண்டு சென்றனர். இப்படி ஒரு நிலையில் டேனியல் பாலாஜியின் இறப்பு குறித்து அவருடைய உடன்பிறந்த சகோதரர் சாய் கண்ணன் பேசியுள்ளதாவது நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது.

Advertisement

அவராகவே தன்னுடைய நண்பர்களுடன் மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகி இருக்கிறார் மருத்துவமனையில் அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது மருத்துவர்கள் அவரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்து இருக்கிறார்கள் ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு 9 54 மணி அளவில் உயிரிழந்திருக்கிறார் தான் இறந்த பிறகு தன்னுடைய கண்கள் பார்வையற்ற ஏழை மக்களுக்கு பயன்பெற வேண்டும் என்ற வகையில் அப்போது கண்தானம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார் அதனால் தான் அவரின் கண்கள் தானமாக பெறப்பட்டது

Advertisement