தாயின் ஆசைக்காக கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் படத்தையே ஏற்க மறுத்துள்ளார் டேனியல் பாலாஜி. சமீப காலமாக சினிமா துறைகளில் பிரபலங்கள் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தான் பிரபல காமெடி நடிகர் சேஷு மாரடைப்பை காரணமாக உயிரிழந்த நிலையில் தற்போது மாரடைப்பு காரணமாக காலமாகி இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் டேனியல் பாலாஜி. இவர் படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார்.

இவர் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வட சென்னை போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து உள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்திலும், சூர்யாவின் காக்க காக்க படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு வில்லன் ரோல் செட் ஆகும் என்று யோசித்த கெளதம் மேனன், வேட்டையாடு விளையாடு படத்தில் இவருக்கு அமுதன் என்ற கொடூரமான சைக்கோ வில்லன் ரோலை கொடுத்தார்.

Advertisement

இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருந்த இவருக்கு அடுத்தடுத்து வில்லன் வாய்ப்புகள் வந்தது. குறிப்பாக வெற்றிமாறன் இவருக்கு பொல்லாதவன் மற்றும் வட சென்னை ஆகிய இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். இறுதியாக மித்ரன் ஜவஹர் இயக்கிய அரியான் படத்தில் நடித்து இருந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சில நாட்களில் குணமாகி வீடு திரும்பினார்.

இப்படி ஒரு நிலையில் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. திருவான்மியூர் இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது வழியிலேயே இறந்து இருக்கிறார். அவருக்கு வயது 48. இப்படி ஒரு நிலையில் இவர் தனது தாயின் ஆசைக்காக யாஷ் பட வாய்ப்பையே நிராகரித்து இருக்கிறார். நடிகர் டேனியல் பாலாஜி சிறு வயதில் இருந்தே ஆவடியில் உள்ள ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு தனது தாயுடன் சென்று வருது வழக்கம்.

Advertisement

இந்த கோவில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து போய்யுள்ளது. அப்போது ஒரு முறை அவரது தாய் இந்த கோவிலை கட்ட ஆசைப்பட்டுள்ளார். தனது தாயின் ஆசைக்காக இந்த கோவிலை சொந்த செலவில் கட்ட ஆரம்பித்து இருக்கிறார். இந்த கோவில் கட்டிக்கொண்டு இருக்கும் போது யாஷ், தனது படத்தில் நடிக்க இவரிடம் கேட்டுள்ளார். ஆனால், அந்த சமயத்தில் கோவில் கட்டுமான பணிகள் நடந்து இருந்ததால் அந்த படத்தை நிராகரித்து இருக்கிறார்.

Advertisement

இருப்பினும் இதை அறிந்த யாஷ், டேனியல் பாலாஜி வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி இருக்கிறார். உடனே யாஷை தொடர்புகொண்டு தயாரிப்பாளரைச் சந்திக்காமலே ஏன் பணத்தை அனுப்பினீர்கள் என்று டேனியல் பாலாஜி கேட்டுள்ளார். அதற்கு யாஷ் “இது கோவிலுக்காக தவிர வேறு எவற்றுக்கும் கிடையாது’ என்று கூறியுள்ளார். அந்த கோவிலுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.

Advertisement