காலம் கடந்தாலும் மக்கள் மத்தியில் என்றென்றும் இடம்பிடித்திருக்கும் தொகுப்பாளர்கள் என்றால் சிலர் தான். அந்த வரிசையில் 21 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. அதோடு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிடி என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. மேலும், டிடி தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர்.

டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு வந்து விட்டார். பின் திவ்யதர்ஷினி அவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். அதன் பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அப்படியே டிடி வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

Advertisement

டிடி திரைப்பயணம்:

இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். மேலும், இவர் தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து இருக்கிறார். இதனிடையே டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின் மூன்று வருடங்களே நிலைத்த இவர்களது திருமணம் 2017 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி டிடி தன்னுடய துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார். கடந்த கொரோன லாக் டவ்னின் போது இவரது காலில் அடிபட்டு காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் இதனால் சில இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisement

வாத்தி இசை வெளியிட்டு விழா :

இப்படி பட்ட நிலையில் சமீபத்தில் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருந்த வாத்தி படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தொகுப்பாளினியாக டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால் டிடி அமர்ந்தபடி தொகுத்து வழங்கியிருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சிக்கு பிறகு அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இந்தனை நாட்கள் என்னை ஆதரித்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி என்று கூறியிருந்தார்.

Advertisement

டிடி வைத்த கோரிக்கை :

மேலும் தான் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது எதையாவது எழுதிக்கொண்டிருப்பேன். அதே போல முலைக்கும் ஏதாவது யோசனை கொடுத்து கொண்டே இருப்பேன். தற்போது இந்த புகைப்படத்தை பகிர்ந்ததற்கு காரணம் ஒரு நிகழ்ச்சியை பல மணிநேரமாக நின்று தொகுத்து வழங்குவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதனால் தான் நான் நிகழ்ச்சிகளை நடத்துபவர்க்ளுக்கு அன்பான கோரிக்கை ஒன்றை வைக்கிறேன்.

நிகழ்ச்சியை தொகுத்ததால் வழங்கும் தொகுப்பாளர்களுக்கு தனியாக ஒரு இருக்கையை கொடுங்கள். அது அவர்களுக்கு நீண்டநேரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உதவும் என்று கூறினார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement