திருமணம் குறித்து பரவிய சர்ச்சைக்கு டிடி கொடுத்திருக்கும் பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் அனைவரும் அழைப்பார்கள். இவர் 21 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார்.

இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. மேலும், வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து வருகிறார். இதனிடையே டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

டிடி திருமணம்:

மேலும், இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. டிடி திருமணத்திற்குப் பிறகும் படங்களிலும் எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என டிடி கணவர் வீட்டில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திவ்யதர்ஷினிக்கும் அவருடைய கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பிறகுதான் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.

டிடி திருமணம் குறித்த சர்ச்சை:

இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி தன்னுடய துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார் டிடி. அதே போல 36 வயதை கடந்த டிடி இன்னமும் சிங்கிளாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆனால், டிடி இரண்டாம் திருமணம் செய்ய போகிறார் என்று பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய திருமணம் குறித்து டிடி பேட்டி ஓன்று அளித்து இருக்கிறார்.

Advertisement

டிடி அளித்த பேட்டி:

அதில் அவர், என்னைப் பற்றி சோசியல் மீடியாவில் வெளிவரும் வதந்திகளுக்கு எல்லாம் என்னால் பதில் கொடுக்க முடியாது. எனக்கு கல்யாணம் என்றால் வெளியே தெரிய தான் போகிறது. இல்லை என்றாலும் வெளிப்படையாக நான் சொல்ல தான் போகிறேன். திருமணம் என்பது ஒரு சாதனை கிடையாது. ஒரு பத்து வருடத்திற்கு முன்பு இருந்த திருமணம் குறித்த புரிதல் இப்போது மாறி இருக்கிறது. திருமணம் எல்லோரும் செய்யக்கூடிய ஒன்று என்பதெல்லாம் கிடையாது. திருமணம் என்பது எல்லோருக்கும் அவசியமான முக்கியம் இல்லை.

திருமணம் குறித்து சொன்னது:

சமூகத்தினால் கொண்டுவரப்பட்ட ஒன்று தான் திருமணம். தற்போது அது மாறி கொண்டுதான் இருக்கிறது. இந்த காலத்தில் யாருக்கு யாரை பிடிக்கிறதோ? யார் தனக்கு சரியாக இருப்பார் என்று நினைக்கிறார்களோ அவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். அதுவும் அவர்களுக்கு எப்ப தோணுதோ அப்போ தான் திருமணம் செய்து கொள்வார்கள். என்னுடைய வாழ்க்கை என்னுடைய விதி. என்னுடைய விதி யாரையும் பாதிக்காது. என்னை பற்றி சோசியல் மீடியாவில் எழுதக்கூடிய விஷயங்கள் குறித்து நான் கவலைப்படுவதும் கிடையாது. நான் எப்படி ஆனவள் என்பதற்கு நான் சான்றிதழ் கொடுக்கிறேன். நீங்கள் கொடுக்க வேண்டாம் என்று பேசி இருக்கிறார்.

Advertisement