இந்த காரணத்தால் தான் டி.ஆர் திட்டிய போது அமைதியாக இருந்தேன் - சீரும் தன்ஷிகா!

By Ajju · 13/11/2017
சமீபத்தில் நடந்த ஒரு பட விழாவில் மேடை நாகரீகம் தெரியவில்லை எனக்கூறி மேடையில் அமர்ந்திருந்த தன்ஷிகாவை அனைவரது முன்னிலையிலும் தனது அடுக்கு மொழி வசனங்களால் திட்டித் தீர்த்தார் பல்துறைக் கலைஞர் டி.ராஜேந்திரன். ஆனால், எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் டி.ஆரிடம் மன்னிப்பு கேட்டது மட்டுமில்லாம மேடையிலேயே அழுதுவிட்டார் தன்ஷிகா. பின்னர் அந்த விஷயம் மீடியா வரைக்கும் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் டி.ஆர் உங்களுக்கு தான் மேடை நாகரீகம் தெரியவில்லை எனக் கூறி அவரை கடுமையாக விமர்சித்தனர். அப்போது இதனைப் பற்றி எந்த ஒரு இடத்திலும் பேசாத தன்ஷிகா அந்த விஷயத்தைப் பற்றி மனம் திறந்துள்ளார். நான் அதிகம் கோபம் கொள்ளாதவள். ஆனால் அதையும் மீறி வந்துவிட்டால் தியானத்தின் மூலம் கட்டுப்படுத்திக் கொள்வேன். அந்த விஷயம் மேடையிலேயே நடந்த போதும் கூட நான் கோபத்தை காட்டத்தற்கு காரணம் என் தியானம் தான், மேலும் டி.ஆர் சார் ஒரு ஆன்மீக வாதி அதனால் அந்த பிரச்னையை அப்படியே விடுவடுமாறு கூறினார். நானும் அந்த வகையில் சென்ற பிறகு தற்போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை எபக் கூறினார் தன்ஷிகா
Tamil Behind Talkies AMP · Quick view
View full