ஜெயிலர் படம் குறித்து தனுஷ் போட்டு இருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. . தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளாக தெடர்ந்து சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து இருக்கிறது. ஆனால், கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. குறிப்பாக கடைசியாக வந்த “அண்ணாத்த” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது.

இந்த சூழ்நிலையை அடுத்து தற்போது ரஜினி நடிக்கும் படம் “ஜெயிலர்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை எனவே இவருக்கும் “ஜெயிலர்” படத்தின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதினால் மும்முரமாக படம் இயக்குவதில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து பதிவிட்டுள்ள தனுஷ் ‘இது ஜெயிலர் வாரம்’ என்று ரஜினியின் பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளார்.

தனுஷின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்த செய்திகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நடிகை சமந்தா- நாக சைதன்யா இருவரும் விவகாரத்தை அறிவித்து இருந்தர்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு ரசிகர்கள் மத்தியில் பேரிடியை ஏற்படுத்தி இருந்தது. நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர். , தனுஷ்- ஐஸ்வர்யா இடையே கருத்து ஏற்பட்டதை அறிந்தும் ரஜினி மற்றும் லதா இருவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. தனுஷை சமரசம் செய்ய பல தடவை பேச்சுவார்த்தைகள் நடத்தி இருந்தார்கள். ஆனால், இந்த விஷயத்தில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவில்லை.

Advertisement

இதனால் ரஜினி மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமே பலனளிக்காமல் போய் விட்டது. ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை பிறந்தாலும் தற்போதும் தனுஷ் தான் ஒரு ரஜினியின் ரசிகராக தான் இருந்து வருகிறார் என்று மீண்டும் நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கடந்த ஆண்டு ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா’ என்று ஒரே வரியில் தனது வாழ்த்தை பதிவிட்டு இருந்தார்.

ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு அதாவது ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவிப்பதற்கு முன்பு ரஜினியின் பிறந்தநாளில் அதிகாலை 1.16 மணிக்கே வாழ்த்து தெரிவித்த தனுஷ் ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா, தி ஒன் அண்ட் ஒன்லி சைபர் ஸ்டார் சார். லவ் யூ சோ மச்’ என்று பதிவிட்டு இருந்தார். ஆனால், கடந்த ஆண்டு காலை 7.55 மணிக்கு ஒரே வரியில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement