கடந்த பல ஆண்டுகளாக சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் ஒரு வழியாக கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலின் வில்லி காயத்ரி அன்னியார் இறந்த பிறகு சீரியல் முடித்து வைக்கப்பட்டது. சீரியல் முடிந்தாலும், முடியும் போது சீரியல் குழு செய்த வேலை தான் செம்மையாக களாய்க்கப்பட்டது. அதில் வரும் பிரகாஷ் என்ற கேரக்டருக்கு அவர்கள் வைத்துவிட்ட ஓட்டுதாடி மிக பிரபலம் ஆனது.

Advertisement

ஒரே இரவில் அமேசான் காடுகள் போல வளர்ந்த அந்த தாடியை ஒட்டும் போதே படக்குழு விழுந்து விழுந்து சிரித்துள்ளது. இதனை சீரியலின் நாயகி வாணி போஜன் கூறியுள்ளார்.நாங்கள் அந்த ஒட்டு தாடியை பிரகாசுக்கு ஓட்டும்போதே செம்மையாக சிரித்தோம். கண்டிப்பாக பேஸ்புக்கில் மீம்ஸ் போட்டு பங்கமாக கலாய்ப்பார்கள் என்று தெரிந்துதான் செய்தோம்.

ஒட்டு தாடியை விட அந்த மீம்சகளை பார்த்துதான் நாங்கள் ரொம்பவே சிரித்தோம். என் அம்மா அந்த தாடியை பார்த்துவிட்டு, அவனுக்கு ஏன்டி, அப்படி ஒரு தாடியை ஓட்டுனிங்க, என கூறி அவரும் சிரித்தார், என வாணி போஜன் கூறினார்

Advertisement
Advertisement