பிரபல தொலைக்காட்சியில் இரவு நேரத்தில் சமையல் மந்திரம் என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் பிரபலமானவர் திவ்யா. சமையல் மந்திரம் திவ்யா என்றால் தான் பலருக்கும் தெரியும்.
இவர், தனது இளகிய மனதின் மூலம் ரோட்டில் கிடந்த ஓர் கேட்பாரற்ற முதியவரை காப்பாற்றியுள்ளார். மேலும், அவரை அழைத்து சென்று அவருக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார் திவ்யா.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த நற்செயலை கடந்த நவம்பர் மாதம் செய்துள்ளார் திவ்யா. எப்படி இருந்தாலும் அவரது இந்த செயளினால் பலரும் பாராட்டி வருகின்றனர்.