ஜோதிடர்கள் குறித்து தவறாக பேசியது தான் மாரிமுத்து மரணத்திற்கு காரணமா? விளக்கம் அளித்த சினிமா விமர்சகர் அந்தணன்.

By Dhilip Kumar · 9/9/2023

ஜோதிடர்களை பற்றி அவதூறாக பேசியதால் தான் அவர் மரணமடைந்தாரா? என்பது குறித்து பேசிய சினிமா விமர்சகர் அந்தணன். எதிர் நீச்சல் தொடர் மாரிமுத்துவின் இறப்பு சின்னத்திரை மற்றும் சினிமா துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மாரிமுத்துவின் உடலை கண்டு எதிர் நீச்சல் சீரியல் நடிகர் நடிகைகள் கதறி அழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் மாரிமுத்து. இவர் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தி இருந்தார். இவர் திமுகவில் இருந்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=4_Y-kPVfNuo&t=27s

ஜோதிடம் பற்றி பேசியது:

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ஜோதிடர்களை சரிமாரியாக கேள்விகளை எழுப்பி அவர்களை திணற வைத்து இருந்தார். பரிகாரங்கள் பற்றி ஜோதிடர்கள் பேசிய பின் பேசிய மாரிமுத்து நான் நீண்ட நேரமாக சிரிப்பை அடக்க முடியாமல் இருக்கிறேன். ஜோதிடர்கள் பேசுவதை எல்லாம் பார்த்தல் ரொம்ப கோபம் தான் வருகிறது. அதே நேரத்தில் சிரிப்பும் வருகிறது. விஞ்ஞானம் பற்றி பேசிய அவர் ஒரு அறிவியல் விஞ்ஞானி மூளையை பயன்படுத்தி செல்போன்னை கண்டுபிடித்தார்கள்.

ஆனால் அதனை ஜோதிடம் என்ற பெயரில் செல்பி எடுத்து நீக்கினால் பரிகாரம் என்று சொன்னால் அவர்கள் முன் நாம் என்ன பேசுவது. ஜோதிடம் பார்பவர்களையும் ஜாதகம் பார்பவர்களையும் மன்னிக்கவே கூடாது. அவர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகள். எந்த ஒரு ஜோதிடராவது 2004 சுனாமி வரும் என்று சொன்னார்களா? 2015 ஆம் ஆண்டு சென்னையில் சுனாமி வரும் என்று சொன்னார்களா? 2020 கொரோனா வரும் என்று சொன்னார்களா? அவர்களை எல்லாம் மன்னிக்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

View this post on Instagram

A post shared by Vikram Buddhanesan (@vsb_dentist)

அந்தணன் கூறியது:

இவர் குறுகிய காலத்திலேயே மளமளவென மேலே வந்தார். தொலைக்காட்சி தொடரில் பலரும் எடுத்து வருகிறார்கள். ஆனால் ஒருவர் குடும்பமும் விரும்பும் நபராக இவர் இருந்து வந்தார். சமீப காலமாகவே நிறைய சேனல்களில் அவர் பேட்டி அளித்தார்.  அந்தப் பேட்டை விளையாட்டு அவருடைய கதாபாத்திரம் என்ன ஆதி குணசேகரன் கதாபாத்திரம்  பற்றியும் கூறி வந்தார். இது அனைத்தும் அவர் மீது ஒரு தனி ஏற்படுத்தியது. இவர் போல எப்பொழுதும்  பரபரப்பாக இருக்கும் படிகள் மனதை இலகுவாக வைத்திருக்க வேண்டும். அவர் தற்போது பெரிய அளவில் வீட்டை வந்து கட்டி வருகிறார் அதற்காக இரவு புகழ் பாராமல் சூட்டிங் மற்றும் டப்பிங் செய்து வந்தார்.

அவருக்கு இதற்கு முன்னாலே  இருதய பிரச்சனைகள் இருந்துள்ளது. அவருடைய கதாபாத்திரம் எதுவும் கோபமாக இருந்தாலும் அது அவருடைய இதயத்திற்கு தெரியாது அவர் நடிக்கிறார் என்று. எனக்காக தனிப்பட்ட விதத்தில் நெருங்கிய நண்பர் அவருடைய கண்ணும் கண்ணும்  திரைப்படம்  வந்தபோது நான் அதை படத்தில் விமர்சித்து ரிவியூ ஒன்று எழுதி இருந்தேன் அதனைப் பார்த்து அவருக்கு மிகவும் பிடித்து போக என்னை அழைத்து பேசினார். அதன் பின் வலைப்பேசி சேனல் தொடங்கிய பின் அதன் ரசிகராக மாறிவிட்டார். அவரது இறப்பை முதலில் நம்பவே முடியவில்லை ஏதாவது போலியான செய்தியாக இருக்குமா என்று தான் சந்தேகப்பட்டேன்.

https://www.youtube.com/watch?v=T-asDiSGED8

ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கும் உங்க பங்கு பெற்ற ஜோதிடர்களுக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் பிரச்சனை என்னவென்றால் சில ஜோதிடர்கள் நீ வந்து  ஜோசியத்தையும் ஜோதிடர்களையும் எவ்வளவு இழிவாக பேசினாய் அதனாலதான் உனக்கு எந்த முடிவு என்றும்  பதிவேற்றி வந்தனர். இது எவ்வளவு முட்டாள்தனம் இது ஒரு மரணம் அவரது குடும்பம் அவரை எவ்வாறு தவிர்த்து இருக்கும். அவ்வாறு எல்லாம் சோதிடர்களால் இதுபோன்ற செய்ய வைக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. இதுவெல்லாம் அவரது மரணத்திற்கு காரணமாக இருக்காது. அவர் விடாமல் திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வந்தார் அவர் சிறிது ஓய்வு எடுத்து இருக்க வேண்டும்.

behindtalkies AMP · Quick view
View full