அஜித்தை தொடர்ந்து விக்னேஷ் சிவனை கமல் கைவிட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண் திகழ்கிறார். இவர் போடா போடி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இதை எடுத்து விக்னேஷ் சிவன் அவர்கள் தன்னுடைய காதலி தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மேலும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் அவர்கள் அஜித்தை வைத்து படம் இயக்கு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இது அஜித்தின் 62வது படம் ஆகும். இந்த படத்திற்கான வேலைகளை விக்னேஷ் சிவன் செய்து இருந்தார். ஆனால், படத்தினுடைய ஒன் லைன் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை என்றவுடன் அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.

அதற்கு பிறகு அஜித்தின் படத்தை மகிழ்ந்திருமேனி இயக்க இருக்கிறார். அந்த படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. தற்போது அந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து விக்னேஷ் சிவன் அவர்கள் தன்னுடைய கனவு திரைப்படமான எல்ஐசி என்ற படத்தை எடுக்க முடிவெடுத்து இருக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க வைக்கிறார்.

Advertisement

பிரதீப் ரங்கநாதனுக்கும் விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடித்து போனதால் சம்மதம் சொல்லிவிட்டார். மேலும், இந்த படத்தை நடிகர் கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தினுடைய பட்ஜெட் 50 கோடி என்று கூறப்படுகிறது. இதற்கான சூட்டிங் வேலையில் விக்கி ரெடியாகி கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Advertisement

இதற்கு முழுக்க காரணம், பிரதீப் ரங்கநாதன் என்று கூறப்படுகிறது. அதாவது, பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் நடிக்க அதிகமாக சம்பளம் கேட்டு இருக்கிறார். ஆனால், அதை கமல் நிறுவனம் தர மறுத்து இருக்கிறது. பின் ராஜ்கமல் நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகி விட்டது. தற்போது இந்த படத்தை லலித் செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. கடைசியாக, செவன் ஸ்கிரீன் நிறுவனம் விஜய் நடித்த லியோ படத்தை தயாரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடிக்க பிரதீப் 20 கோடிக்கு சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் எஸ். ஜே. சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கூடிய விரைவில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement