தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். அதோடு அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது. இந்த படம் ஒரு வங்கியை ஹீரோ கொள்ளையடிக்கும் கதை அம்சத்தை கொண்டது என்று சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. அதோடு ‘லயன்’ என்ற தலைபில் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தை தொடர்ந்து அட்லி அவர்கள் மீண்டும் தளபதி விஜயை வைத்து படம் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

அட்லீ -பிரியா காதல்:

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, அட்லீ அவர்கள் பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவி கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா. அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் சினிமாவில் அறிமுகமானது என்னவோ சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தில் தான்.

அட்லீ -பிரியா திருமணம்:

பின்னர் இவர் நான் மகான் அல்ல, சிங்கம் என சில படங்களில் நடித்துள்ளார். பிறகு பிரியா அட்லீயை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார். மேலும், ப்ரியா அட்லீ எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் தன் கணவருடன் எடுக்கும் போட்டோ, வீடியோ என அனைத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார். சமீபத்தில் கூட பிரியா தன் கணவருடன் சேர்ந்து சுற்றுலா சென்று இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார்.

Advertisement

அட்லீ -பிரியா அன்ஸீன் புகைப்படம்:

இந்நிலையில் தற்போது அட்லி-ப்ரியா திருமணத்தில் எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், திருமணத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் ஆர்யா உடன் கலந்து கொண்டு இருக்கிறார். அந்த அன்சீன் புகைப்படத்தை தான் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அட்லீ இயக்கத்தில் நயன்தாரா,ஆர்யா நடிப்பில் உருவாகியிருந்த ராஜா ராணி படம் அப்போதுதான் வெளியாகி இருந்தது.

Advertisement

வைரலாக்கும் நெட்டிசன்கள்:

மேலும், ராஜா ராணி படத்தின் மூலம்தான் அட்லி தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. ராஜா ராணி படத்திற்கு பிறகு நயன்தாரா- ஆர்யா இருவரும் சேர்ந்து சில படங்களில் நடித்து இருந்தார்கள். இதனால் இவர்கள் குறித்து பல கிசுகிசுக்கள் சோசியல் மீடியாவில் வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே நயன்தாராவின் புகைப்படம் என்றாலே ரசிகர்கள் செம்ம வைரலாக்குவார்கள்..இந்த படத்திற்கு சொல்லவே தேவையில்லை.

Advertisement