தனது அடுத்த படத்தின் டைட்டில் என்ன ? கதை என்ன ? என்பதை பற்றிய அறிவிப்பை கூறி இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இய்குணராக அறிமுகமானவர் இயக்குனர் ரஞ்சித். அந்த திரைப்படம் இளஞ்சர்கள் மத்தியில் ஒரு ஜாலியான படமாக பார்க்கப்ட்டது. அதன் பின்னர் இவர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் ஹிட் அடித்தது. தொடர்ந்து இரண்டு படங்களின் வெற்றியால் தனது மூன்றாவது படத்தில் இவருக்கு ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கபாலி, காலா என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி மாஸ் காட்டி வந்தார்.இயக்குனராக மட்டுமலல்லாமல் இவர் நீலம் ப்ரோடேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இறுதியாக ரஜினியின் காலா படத்தை இயக்கி இருந்த் ரஞ்சித், தற்போது ஆர்யாவை வைத்து ‘சார்பட்டா பரம்பரை’ என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார்.

இதையும் பாருங்க : ஈர புடவையில் போட்டோ ஷூட் பண்ணதுக்கு இதான் காரணம் – தண்ணியில் தவறி விழுந்துள்ள வீடியோவை பகிர்ந்த ரித்திகா.

Advertisement

இந்த படத்தில் நடிகர் ஆர்யா ஒரு குத்துச் சண்டை வீரராக நடித்து வருகிறார் இதற்காக தன்னுடைய உடலை ஒரு குத்துச் சண்டை வீரரை போல தயார் படுத்தி இருந்தார் ஆர்யா. இந்த படத்தில் பசுபதி, கலையரசன், சஞ்சனா நடராஜன் போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படம் வரும் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிறைந்து இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஞ்சித், தனது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த படத்திற்கு  ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் முழுக்க காதலை மையப்படுத்தி தான் இந்த படத்தை எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளார் ரஞ்சித்.

Advertisement
Advertisement