தமிழ் சினிமா திரை உலகில் பிரமாண்டம் என்றால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது இயக்குனர் ஷங்கர் தான். மேலும், சினிமாவில் படங்களை இயக்குவதில் தனக்கென ஒரு பாதையையும், வித்தியாசமான கதைக் களத்தையும் கொண்டவர். இவருடைய படங்கள் எல்லாம் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் ஷங்கர் படத்துக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றும் சொல்லலாம்.சங்கர் அவர்கள் டிப்ளமோ மெக்கானிக் படிப்பு படித்தவர். மேலும், சினிமாவில் சங்கர் இயக்குனர் மட்டுமல்லாமல் தற்போது எஸ். பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

எஸ் ஏ சி இயக்கிய விஜயகாந்த நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான வசந்த ராகம் படத்தில்

இவர் சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இவருடைய படங்கள் எல்லாமே தொழில்நுட்ப நுண்ணறிவும், பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றம், மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வரும் சிந்தனை கருத்துக்கள், படத்தில் காட்டப்படும் இடங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். அவருடைய படங்கள் எல்லாமே வித்தியாசமான முயற்சிகளிலும், புதுப்புது படைப்புகளாக பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரியும்.

Advertisement

உதவி இயக்குனர் :

இவருடன் மட்டுமல்லாமல் சங்கர் அவர்கள் பவித்ரன் என்ற ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இயக்குனர் சங்கர் ஆரம்பத்தில் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.எஸ்.வி சந்திரசேகர் இடம் உதவி இயக்குனராக சினிமாவில் தன்னுடைய கரைப்பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் சூரியன் படத்தை இயக்கிய பவித்திரனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தார்.

எஸ் ஏ சி இயக்கியத்தில் சிவகுமார் நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான பூவும் புயலும் படத்தில்

மேடை நாடகம், ஸ்க்ரிப்ட் ரைட்டிங் :

இதற்கு பின்னர் தான் இவர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த “ஜென்டில்மேன்” என்ற படத்தை இயக்கினார்.மேலும்,சங்கர் அவர்கள் திரை உலகிற்கு வருவதற்கு முன்னால் மேடை நாடகங்களில் வசனம், கதை எழுதுவது போன்ற வேலைகளை செய்து இருந்தார். இதற்குப் பின்னர் தான் பிரபல இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இடம் எழுத்தராக சேர்ந்தார். பின் உதவி இயக்குநராக மாறினார்.

Advertisement
எஸ் ஏ சி இயக்கியத்தில் 1990 ஆம் ஆண்டு ரஹ்மான் நடிப்பில் வெளியான ‘சீதா’ படத்தில்

லோ பட்ஜட் படங்களை இயக்காதது ஏன் :

மேலும், இவர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்து கொண்டே ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்து உள்ளார். இப்படி ஒரு நிலையில் ஷங்கர் தலை காண்பித்துள்ள சில படங்களின் லிஸ்ட் இதோ. மேலும், ஷங்கர் தன் படங்களை பிரம்மாண்டமாக தான் எடுப்பார். இது குறித்து அவரிடம் பேட்டி ஒன்றில் கேட்ட போது ‘ட்ஜெட்டுக்காக படம் பண்ணக் கூடாது . ஒரு கதைக்கு இவ்வளவு தான் பட்ஜெட் தேவைப்படுகிறது என்றால் அப்போது 5 கோடியிலும் படம் பண்ணலாம் என்று கூறி இருந்தார்.

Advertisement

ஷங்கரின் அடுத்தடுத்து படங்கள் :

ஷங்கர் இறுதியாக ரஜினியை வைத்து ‘2.0’ படத்தை இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து தற்போது தெலுங்கில் ராம் சரணை வைத்து ‘RC15’ படத்தை இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து கமலின் இந்தியன் 2 படத்தை எடுக்க இருக்கிறார் ஷங்கர். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் எப்போதோ துவங்கிய நிலையில் சில பல பிரச்சனைகளால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது இன்று ஷங்கர் பிறந்தநாளின் இந்தியன் 2 படத்திற்கான பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Advertisement