சினிமா திரை உலகில் பிரமாண்டம் என்றால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது இயக்குனர் ஷங்கர் தான். மேலும், சினிமாவில் படங்களை இயக்குவதில் தனக்கென ஒரு பாதையையும், வித்தியாசமான கதைக் களத்தையும் கொண்டவர். இவருடைய படங்கள் எல்லாம் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் ஷங்கர் படத்துக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றும் சொல்லலாம். இயக்குனர் ஷங்கர் அவர்கள் 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் அப்பா பெயர் சண்முகம் அம்மா பெயர் முத்துலட்சுமி. சங்கர் அவர்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். சங்கர் அவர்கள் டிப்ளமோ மெக்கானிக் படிப்பு படித்தவர். மேலும், சினிமாவில் சங்கர் இயக்குனர் மட்டுமல்லாமல் தற்போது எஸ். பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இவருடைய படங்கள் எல்லாமே தொழில்நுட்ப நுண்ணறிவும், பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றம், மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வரும் சிந்தனை கருத்துக்கள், படத்தில் காட்டப்படும் இடங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். அவருடைய படங்கள் எல்லாமே வித்தியாசமான முயற்சிகளிலும், புதுப்புது படைப்புகளாக பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும். மேலும்,சங்கர் அவர்கள் திரை உலகிற்கு வருவதற்கு முன்னால் மேடை நாடகங்களில் வசனம், கதை எழுதுவது போன்ற வேலைகளை செய்து இருந்தார். இதற்குப் பின்னர் தான் பிரபல இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இடம் எழுத்தராக சேர்ந்தார். பின் உதவி இயக்குநராக மாறினார். மேலும், இவர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்து கொண்டே ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்து உள்ளார்.

Advertisement

இவருடன் மட்டுமல்லாமல் சங்கர் அவர்கள் பவித்ரன் என்ற ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இதற்கு பின்னர் தான் இவர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த “ஜென்டில்மேன்” என்ற படத்தை இயக்கினார். பின் இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது. மேலும், இந்த படத்தை தெலுங்கு, ஹிந்தி என இரு மொழிகளில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். மேலும், இவருடைய முதல் படமே மாபெரும் வெற்றி அடைந்தது. இதற்கு பிறகு தொடர்ந்து “காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், நாயகன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், எந்திரன் 2 என பல படங்களை தயாரித்து உள்ளார்.

Advertisement

அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய எல்லாப் படங்களுமே ப்ளாக்பஸ்டர் படங்கள் தான். மேலும்,25 ஆண்டு சினிமா வாழ்க்கையில் இவர் 13 படங்களை மட்டும் தான் இயக்கி உள்ளார்.அதுவும் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். அது மட்டுமில்லாமல் இவர் இயக்கும் படங்கள் எல்லாமே மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் தான். மேலும், இவர் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர். மேலும், இவருடைய படங்களில் எல்லாம் புதுப்புது தொழில்நுட்பங்களை கொண்டு வருவார். இந்நிலையில் சங்கர் அவர்கள் இந்தியாவிலேயே பிரம்மிக்க வைக்கும் படங்களை இயக்கும் இயக்குனர் ஆக மாறிவிட்டார்.

Advertisement

அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் முதன்மையானவராக ஷங்கர் திகழ்ந்து வருகிறார். இவர் ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள். தற்போது இயக்குனர் ஷங்கர் அவர்கள் பல வருடங்கள் கழித்து உலக நாயகன் கமலஹாசனை வைத்து “இந்தியன் 2” என்ற படத்தை இயக்கி வருகிறார்.

Advertisement