புகழ்பெற்ற இயக்குனர், நடிகருமான விசு குறித்து பலரும் அறிந்திராத தகவலை பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் விசு என்கிற விசுவநாதன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தொகுப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர். இவர் 1945 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி பிறந்தவர். இவர் முழு பெயர் எம்.ஆர்.விஸ்வநாதன் ஆகும்.

இவர் முதன் முதலில் இயக்குனர் பாலச்சந்திரனிடம் தான் துணை இயக்குனராக பணிபுரிந்தார். அதன் பின் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி நடித்தும் இருக்கிறார். பெரும்பாலும் இவர் இயக்கிய படங்கள் எல்லாம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை ஆகும். இவர் கடைசியாக ‘தங்கமணி ரங்கமணி’ என்ற படத்தை இயக்கி இருந்தார். அதன் பின் இவர் சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

Advertisement

விசு குறித்த தகவல்:

பின் வயது முதிர்ச்சி காரணமாக விசு டயாலிசிஸ் செய்து வந்ததால் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். வாரத்துக்கு 2 முறை டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தவருக்கு 3 முறை செய்யக் கூடிய சூழல் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்து இருந்தது. பின் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி மாலை சிறுநீரகப் பிரச்னை காரணமாக நடிகர் விசு சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் இழப்பு தமிழ் திரை உலகுக்கு பேரிழப்பு என்று சொல்லலாம்.

விசுவின் குடும்பம் :

இதனிடையே விசு கடந்த 1975 ஆம் ஆண்டு ‘சுந்தரி’ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு லாவண்யா, சங்கீதா , கல்பனா என்று மூன்று மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இன்று நடிகர் விசுவின் 79 வது பிறந்த நாள். இந்த பிறந்தநாளில் அவரைக் குறித்து சில தகவலைப் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம். இறப்பதற்கு முன்பாக விசு பேட்டியில், தொகுப்பாளர் ஒருவர் நீங்கள் உங்களுடைய எல்லா படத்திற்கும் ‘உமா’ என்று பெயர் வைத்து உள்ளீர்கள்.

Advertisement

விசு பேட்டி:

அதற்கு காரணம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி எழுப்பினார். அதற்கு விசு, உமா என்பது என்னுடைய மனைவி பெயர் கிடையாது. நான் முதல்லட்ராவெல்ஸில் இருந்தேன். அப்போது முப்பது, நாற்பது பெண்மணிகளோடு ஸ்ரீலங்கா பயணம் செய்தேன். அங்கு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது நான் ரூமுக்கு வெளியில் உட்கார்ந்து என்னுடைய முதல் கதை எழுதினேன். அங்கிருந்த டீச்சர்களில் ஒருவர் தான் உமா. அவர் என்னை பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். நான் என் கதையை சொன்னேன்.

Advertisement

உமா பெயர் காரணம்:

அதோடு அப்போது என் கதையை கேட்க யாரும் இருக்க மாட்டார்களா என்று நினைத்தது உண்டு. பின் அவர்களிடம் என் கதையைக் கூற கூற அவர், கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. நீங்கள் இங்க இருக்க வேண்டிய ஆளே கிடையாது. இவ்வளவு அற்புதமாக கதையை எழுதி உள்ளீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பெரிய ஆளாக வருவீர்கள் என்று கூறினார். அப்போது தான் என்னுடைய எல்லா படத்திற்கும் ‘உமா’ என்று பெயரை வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். இது குறித்து என் மனைவியும் எதுவும் கூறாமல் சரி என்று ஒத்துக் கொண்டார்.

Advertisement