கிரேசி மோகன் மகன் யார் தெரியுமா ! - புகைப்படம் உள்ளே

By Ashok · 4/3/2018
கிரேசி மோகன் 1952ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் ஒரு காமெடி நடிகராக நமக்கு அறிமுகம் ஆனார். ஆனால் இவர் உண்மையில் இரு கதையாசிரியர். சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர். 1972ஆம் ஆண்டு அந்த கல்லூரியில் தமிழ் மன்றத்திற்காக ஒரு கதை எழுதி நாடகத்தை அரங்கேற்றினார். இந்த கதையை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் அவருக்கு பரிசினை வழங்கினார். அன்றிலிருந்து கிரேசி மோகன் கதையாசியரியராக மாறிவிட்டார். பின்னர் இவர் எழுதிய 30 நாடகங்கள் 6000 முறை மேடை ஏறியுள்ளது. மேலும், பல படங்களுக்கு டயலாக் எழுதினார், சதி லீலாவதி காதலா காதலா மைக்கேல் மதன காமராஜன் இந்தியன் அவ்வை சண்முகி தெனாலி பஞ்சதந்திரம் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என பல படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை, வசனம் எழுதினார். இவருக்கு அர்ஜூன் என்ற மகன் இருக்கிறார். அர்ஜுனுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஹரிதா என்பவருடன் திருமணம் ஆனது. இந்த திருமணத்திற்கு பல திரை பிரபலங்கள் வந்ததிருந்தனர். தற்போது ஒரு சில சீரியல்களில் நடித்துக்கொண்டும், சில நாடகங்களுக்கு கதையும் எழுதி வருகிறார் கிரேசி மோகன்.  
behindtalkies AMP · Quick view
View full