வாழக்கை என்பது இன்ப துன்பங்கள் நிறைந்தது. வாழ்க்கையில் எப்போதும் இன்பத்தை மட்டுமே எதிர்பார்த்திட முடியாது. அவ்வப்போது வரும் துன்பங்களை எதிர்கொண்டு, அதனை சமாளித்து வெளியே வர வேண்டும்.

Advertisement

இதனை சமாளிக்க முடியாத சில மனிதர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பிரபலங்களும் இதில் அடக்கம். பிரபல ஹிந்தி சீரியலான Ishqbaazல் தயாரிப்பு மேற்பார்வை செய்து வந்தவர் சஞ்சய்.

இந்த சீரியல் தற்போது காதலா காதலா என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டு தமிழில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில் வேலை செய்துவந்த சஞ்சய் கடந்த 2ம் தேதி மாலை 6.30 மணிக்கு தன் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Advertisement

Advertisement

மேலும், தன் தற்கொலைக்கு தானே காரணம். வேறு யாரும் கிடையாது. எனக்கு நிறைய பணப்பிரச்னை உள்ளது. அதனால் என் குடும்பம் கஷ்டப்படுகிறது. இதன் காரணமாகவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டார் சஞ்சய்.

இவருக்கு அவரது வீட்டில் வைக்கப்பட்ட இறுதி அஞ்சலியை காதலா காதலா சீரியல் குழுவினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement