பிரபல துணிக்கடை நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களுக்காக நடிகைகளை நடிக்க வைத்து வந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக சரவணா ஸ்டோர்ஸின் ஓனரே விளம்பரப்படங்களில் நடிகைகளுடன் இணைந்து நடிக்க தொடங்கிவிட்டார்.
பிரபல விஜய் டீவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருப்பவர் ஓவியா.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்தான் வெற்றிப்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில பல காரணங்களுக்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இதையும் படிங்க: ஓவியாவின் வருகையால் திணரப்போகும் OMR .!

Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா தற்போது பிரபல வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இந்த விளம்பரத்திற்காக ஓவியா கோடிகளில் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியாவின் ரசிகர்கள் பட்டாளம் மளமளவென்று உயர்ந்தது போலவே தற்போது ஓவியாவின் சம்பளமும் கிறுகிறுவென்று எகிறியிருக்கின்றது.

எதுஎப்படியோ சரவணா ஸ்டோர்ஸின் புதிய கடை திறப்பு விழாவிற்கு வருகை தரும் ஓவியாவை காண ஓ.எம்.ஆர் சாலை ரசிகர்களின்வெள்ளத்தில் மூழ்கப்போவது நிச்சயம்.

Advertisement
Advertisement