தமிழ் சினிமா உலகில் இயக்கத்தின் இமயமாக இருந்தவர் பாரதிராஜா. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் முதலில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் பாரதிராஜா இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த படம் வேதம் புதிது. இந்த படத்தில் சத்யராஜ், அமலா, சாருஹாசன், ராஜா, நிலக்கல் ரவி, ஜனகராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்களில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

மேலும், இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் தாசரதி. இந்த படத்தில் அவர், பாலு உங்கள் பெயர். தேவன் என்பது நீங்கள் படிச்சு வாங்கின பட்டமா என்று கேட்டு இருப்பார்? இந்த வசனம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தது. இவர் வேற யாரும் இல்லைங்க ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பார்த்திபன் மற்றும் ஜீவாவுக்கு அப்பாவாக நடித்த வருபவர் தான் நடிகர் தாசரதி. தற்போது இவர் ஈரமான ரோஜாவே 2 சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

Advertisement

ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி கொண்டே என பல நடிகர்கள் நடிக்கிறர்கள். இந்த தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சீரியலில் பார்த்தி, ஜீவா இருவரும் அண்ணன், தம்பி. அதேபோல் பிரியா, காவ்யா இருவரும் அக்கா, தங்கை. இதில் காவ்யா-ஜீவா இருவரும் காதலித்து இருந்தார்கள்.

ஆனால், விதி செய்த வலியால் பார்த்தி- காவியாவையும், ஜீவா-ப்ரியாவையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். சீரியலில் ஜோடி மாறி திருமணம் ஆன பிறகு பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், தாசரதி நடிகர் மட்டும் இல்லாமல் பிரபலமான டப்பிங் கலைஞரும் ஆவார். அந்த வகையில் இவர் தமிழில் கிருஷ்னருக்கு குரல் கொடுத்தவர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றே சொல்லலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியில் மிகப் பிரபலமான சீரியலாக திகழ்ந்தது மகாபாரதம்.

Advertisement

மகாபாரதம் சீரியல்:

மகாபாரதம் சீரியலை யாராலும் மறக்க முடியாது. பஞ்சபாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையே நிகழ்ந்த போரை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட தொடர். இந்த தொடரை ஹிந்தி மொழியில் எடுத்திருந்தார்கள். பின் இந்த சீரியலை தமிழில் டப் செய்து விஜய் டிவியில் ஒளிபரப்பி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் சின்ன திரையில் 100 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட முதல் இந்திய தொடர் என்ற பெருமையும் மகாபாரதம் பெற்றிருந்தது.

Advertisement

மேலும், இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்கள். அதிலும் இந்த தொடரில் ஆரம்பத்தில் தொடங்கி முடியும் வரை கிருஷ்ணர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மிகப் பிரபலம் என்றே சொல்லலாம். இவருக்காகவே இந்த சீரியலை பார்த்த ஒரு ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அதற்கு காரணம் இவருடைய வசீகரமான குரல் என்று சொல்லலாம். தமிழில் இந்த சீரியலில் கிருஷ்ணனின் குரலைக் கேட்டு பலரும் வியப்பித்துப் போவார்கள். தமிழில் கிருஷ்ணர் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் நடிகர் தாசரதி.

Advertisement