90ஸ் காலகட்டத்தில் நடித்த பல தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. அந்த வகையில் 1994 ஆம் ஆண்டு நடிகர் பிரபு நடித்த டூயட் படத்தில் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி ஷெசாத்ரி. அந்த படத்தில் வந்த அஞ்சலி அஞ்சலி பாடலும், எந்த கடையில நீ அரிசி வாங்குற என்ற பாடலும் 90ஸ் கிட்ஸ்களால் இன்றளவும் நாம் யாராலும் மறுக்க இயலாது.

Advertisement

இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள டான்பாட்டில் நவம்பர் மாதம் 16 நாள் 1963 அன்று தமிழ் குடம்பத்தில் பிறந்தார். ஆனால், இவர் வளர்ந்தது எல்லாம் ஜார்கண்ட் மாநிலத்தில தான். ஹிந்தியில் 1983 இல் வெளியான பைண்டர் பாபு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் பலராலும் விருப்பப்பட்ட மீனாட்சி ஷெசாத்ரி 80 களில் அதிகம் சம்பளம் பெற்ற நடிகை என்ற பெயரையும் பெற்றார்.

நடிப்பையும் தாண்டி நடனத்தில் சிறந்து விளங்கினார் மீனாட்சி ஷெசாத்ரி. இவர் இந்திய கலையான பரதம்,கதகளி போன்ற நடனங்களில் மிகவும் தேர்ச்சிபெற்றவர்.மேலும் இவர் பாலிவுடில் சிறந்த நடிகைக்கான விருதினை பல முறை கைப்பற்றியவர். பாலிவுடில் அமிதா பச்சன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் 1995 இல் மைசூறை சேர்ந்த வங்கி முதலீட்டாளர் ஹரிஷ் என்பவரை திருமணம செய்துகொண்டார்.

Advertisement

Advertisement

திருமணத்திற்கு பிறகு இவருக்கு ஒரு மகளும் இரு மகன்களும் பிறந்தனர். தற்போது அமெரிக்கா நியூ யார்க் நகரில் தனது குடுபத்துடம் வசித்து வரும் மீனாட்சி சௌதிரி அங்கேயே பாரதநாட்டியம், கதகளி போன்ற நடன கலைகளை கற்றுத்தரும் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். தற்போது இவருக்கு 56 வயதாகிறது. திருமணத்திற்கு பின் இவரது சில புகைப்படங்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

Advertisement