மகன் இறந்து மூன்றே வாரத்தில் பிரபல நடிகரின் தாய் இறந்து இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பரீச்சியமான நடிகர்களில் ஒருவர் பாபு. இவர் முதலில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தார். அதற்கு பிறகு தான் பாரதிராஜா இவரை ஹீரோவாக சினிமாவில் அறிமுகம் ஆக்கிருந்தார்.

இவருடைய நடிப்பில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. படம் சுமாராக இருந்தாலும் பாடல்கள் பட்டைய கிளப்பியிருக்கும். ஆரம்பத்தில் ஹீரோவாக இவர் மக்கள் மத்தியில் பெரிதாக கவரவில்லை என்றாலும் போக போக பிரபலமானார். கிராமத்து கதை படத்தில் தான் தேர்ந்தெடுத்து நடித்து இருந்தார் பாபு. அந்த வகையில் இவர் கமிட்டாகி இருந்த பத்து படங்களில் ஒன்று மனசார வாழ்த்துங்களேன்.

Advertisement

பாபு குறித்த தகவல்:

இந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சி எடுக்கப்பட்டது. மாடியில் இருந்து ஹீரோ குதிக்க வேண்டும். இதற்கு நடிகர் பாபு நிஜமாகவே குதிக்கிறேன் என்று சொன்னார். ஆனால், பட குழுவினர் வேண்டாம் டூப் வைத்து கொள்ளலாம் என்று சொன்னார்கள். இருந்தாலும், இயக்குனர் சொன்னதை கேட்காமல் நிஜமாகவே பாபு குதித்து விட்டார். யாரும் எதிர்பார்க்காத வகையில் பாபு குதிக்கும் போது நிலை தடுமாறி வேறொரு இடத்தில் விழுந்து விட்டார்.

பாபுவுக்கு ஏற்பட்ட விபத்து:

இதனால் அவருடைய முதுகுப் பகுதியில் பலமாக அடிபட்டு எலும்பு உடைந்து விட்டது. இதனை அடுத்து பாபுவிற்கு முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை செய்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் எத்தனையோ மருத்துவர்கள், எவ்வளவோ சிகிச்சைகள் செய்தும் அவரால் பழையபடி நிமிர்ந்து நிற்க முடியவில்லை. இதனால் இவருடைய சினிமா கனவே பாலாகிவிட்டது. அன்றிலிருந்து வரை பாபு நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகவே இருந்தார்.

Advertisement

நடிகர் பாபு மரணம்:

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த இவரை அவருடைய வயதான அம்மா பிரேமா தான் பார்த்துக்கொண்டார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த மாதம் பாபுவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதற்கு தீவிர சிகிச்சையும் அளித்திருந்தார்கள். இருந்தாலும் பாபு இறந்து விட்டார். இவருடைய மறைவிற்கு இயக்குனர் பாரதிராஜா உட்பட சில திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.

Advertisement

பாபுவின் அம்மா மரணம்:

மேலும் தன்னுடைய மகனின் பிரிவை தாங்க முடியாத பாபுவின் அம்மா பிரேமா மனமடைந்து போய்விட்டார். இதனால் இவர் சரியாக சாப்பிடாமல் தன்னுடைய மகனை நினைத்து வருத்தத்தில் இருந்தார். இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று மறைந்த நடிகர் பாபுவின் அம்மா இறந்திருக்கிறார். மகன் இறந்து மூன்றே வாரத்தில் தாயும் இறந்திருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement