தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ஆர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மிகப் பிரபலமான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நடிகர் ஆர்யா அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற 16 பெண்களில் இருந்து தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், இறுதி வரை அவர் அந்த பெண்களில் இருந்து யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை.

Advertisement

எதற்காக இந்த நிகழ்ச்சி, ஒரு வேளை டிஆர்பி ரேட்டிங்காகவா? உண்மையாகவே ஆர்யாவின் திருமணத்திற்கு பெண் தேடுவதற்காக நடந்ததா? என்று இன்னும் வரை இந்த நிகழ்ச்சி புரியாத புதிராகவே உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகை சங்கீதா கிரிஷ் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடிகர் ஆர்யா அவர்கள் நடிகை சாய்ஷா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் கஜினிகாந்த் என்ற படத்தில் இணைந்து நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு பிறகு தான் இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அபர்ணதி தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

Advertisement

அபர்ணாதிக்கு அடுத்து எங்க வீட்டு மாபிள்ளை நிகழ்ச்சியில் பிரபலமடைந்தவர் நடிகர் குஹாஷினி, ஆர்யா திருமண விஷயத்தில் இவர் அளித்த பேட்டியில், 16 பெண்களை ஏமாற்றியதற்கு நான் ஆர்யாவை அறைந்து இருக்க வேண்டும். அவருடைய மதத்தில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் அவர் உறுதியாக இருந்தால் ஏன் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று ஆவேசமாக கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் உள்ளாடை தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Advertisement