சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து பின் தமிழ், மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார். அதற்குப் பிறகு தான் இவர் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார்.

இயக்கிய சீரியல்கள் :

இவர் முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற தொடரில் இணை இயக்குனராக பணியாற்றினார். அந்த தொடரில் மூலம் திருச்செல்வம் நடிகராகவும் அறிமுகமானார். அதற்கு பிறகு கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த தொடர் மத்தியில் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.

Advertisement

இதனை தொடர்ந்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை திருச்செல்வம் இயக்கி இருக்கிறார்.மேலும், திருச்செல்வம் சீரியல்களை சீரியல்கள் எல்லாம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதற்கு காரணம் இவர் இயக்கும் சீரியல் எல்லாம் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்ட கதையாக அமைந்திருக்கும். தற்போது இவர் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியல் :

அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல பிற்போக்கு வசனங்கள் இருந்ததால் இந்த தொடருக்கு பல எதிர்புகள் எழுந்தது. ஆனால், சமீப காலமாக இந்த தொடரில் பல பெண் புரட்சி வசனங்கள் இடம்பெற்று வருவதால் இந்த தொடருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் டி ஆர் பியிலும் முன்னணியில் இருக்கிறது திருட்செல்வம் இயக்கிவரும் எதிர் நீச்சல் சீரியல்.

Advertisement

திருச்செல்வதற்கு வந்த கடிதம் :

எதிர் நீச்சல் சீரியல் இப்படி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையி இந்த சியலில் இயக்குனர் திருச்செல்வம் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தனக்கு ஒரு கடிதம் வந்ததாகவும் அந்த கடிதத்தில் எதிர்நீச்சல் சீரியலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இருந்த்ததாம். மேலும் அந்த கடிதத்தில் என்னுடைய மனைவி தினமும் 9.30 மணிக்கு உங்களுடைய எதிர்நீச்சல் சீரியலை பார்த்து விட்டு என்னை குணசேகரனாகவும் அவளை ஜனனியாகவும் நினைத்து கொண்டு அவளது நடவடிக்கை மொத்தமாக மாறி வருகிறது என்று குறிப்பிட்டிருந்தாராம்.

Advertisement

ரசிகர்களின் ஆதரவு :

திருச்செல்வம் பேசிய வீடியோ வரலாகவே தற்போதுதான் எதிர்நீச்சல் சீரியல் டி ஆர் பியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில சமயங்களில் இந்த மாதிரியான கருத்துக்கள் வருவது சகஜம் தான் அதற்காக இந்த சிரியலை நான் நிறுத்த போவதில்லை என்று திருச்செல்வம் கூறியிருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை நிறுத்தியோ அல்லது மாற்றியோ விடாதிர்கள் நாஜிகள் விருப்பமாக பார்க்கும் சீரியல் இது ஒன்று மட்டும்தான். கண்டிப்பாக எங்களுடைய ஆதரவு இந்த சீரியலுக்கு இருக்கும் என்று பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement