சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ஆதார் லவ் என்ற வீடியோ மூலம் ஒரே நாளில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் வலம் வந்தவர் பிரியா வாரீர்.அந்த வீடியோவிற்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட கிராக்கி ஆகிவிட்டது.

Advertisement

அந்த வீடியோவிற்கு பிறகு ஒரே நாளில் இன்ஸ்டாகிராமில் அதிகம் ஃபாலோவ் செய்யப்பட்ட பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்த பிரியா வாரியர் .முதல் இடத்தில் கெய்லி ஜென்னார் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள கால்பந்து வீரர் ரொனால்டோ இவர்களை தொடர்ந்து பிரியா வாரியர் 606ஆயிரம் ஃபாலோவர்ஸ் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

மேலும் யூ டுயூப்,பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் பிரியா வாரியர்.
தமக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று தான் எதிர் பார்க்கவில்லை என்றும்,தனக்கு இந்த அளவிற்கு பிரபலத்தை ஏற்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி மற்றும் உங்கள் ஆதரவை நான் எப்போதும் நாடி உள்ளான் என்று கூறி ஒரு விடியோவை வெளியிட்டார் பிரியா வாரியர்.

Advertisement

Advertisement

இந்நிலையில் கேரளாவில் நடந்த ஆசிய நெட் விருது வழங்கும் விழாவிற்கு சென்ற பிரியா வாரியரின் செயல் அனைவரையும் எரிச்சலூட்டியது. அந்த நிகழ்ச்சிக்கு ஒரு நீளமான ஆடையை அணிந்து வந்த அவர், அது தரையில் படாமல் இருக்க ஒரு உதவியாளர் அந்த ஆடையை தூக்கி பிடித்துக் கொண்டே வந்தார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்கில் வெளியாக அதனை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் டூ மச் என்று அவரை கலாய்த்து பல மீம்களை வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement