வீடியோவை வெச்சி மிரட்டினாலும் பயப்படாதான்னு எங்க அம்மா சொன்னாங்க.! வைரலாகும் இளம் பெண்ணின் முகநூல் பதிவு.!

By Rajkumar · 12/3/2019

இன்று தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது பொள்ளாச்சி பாலியல் வெறி ஆட்டம் தான். பொள்ளாச்சி சேர்ந்த பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த அந்த காம பிசாசுகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இந்த சம்பவத்தால் பெண்களை பெற்ற பல பெற்றோர்கள் கவலையிலும் பயத்திலும் இருக்கும் நிலையில், தனது மகளை பிரிந்து வாழும் தாய் ஒருவர் தனது மகளுக்கு கூறிய அறிவுரைகளை திருச்சியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது வைரலாக பரவி வருகிறது.

இதையும் படியுங்க : பொள்ளாச்சி காம பிசாசுகளுக்கு இருக்கும் அரசியல் தொடர்பு.! தைரியமாக ட்வீட் செய்த சின்மயி.! 

அந்த பதிவில், இந்த கோர சம்பவத்திற்குப் பின் எனக்கு "கோயம்புத்தூர் குடும்பம்" சேர்ந்த ஒரு பெண்ணாக இருக்கும் எனக்கு , நண்பர்களுடனேயே போகாதபடி பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று என் குடும்பத்தினர் கேட்கும் அதே வழக்கமான தொலைபேசிகளை நான் எதிர்பார்க்கிறேன்! ஆனால் அதற்கு பதிலாக என் அம்மா இதை சொன்னார்.

https://www.facebook.com/narmatha.moorthy/posts/2227339420917636

நீ குடும்பத்திலிருந்து தனியாக இருந்து வருகிறாய் என்று எனக்கு தெரியும், நான் வலுவான பெண்ணை வளர்த்தேன் என்று நான் எப்போதும் நம்புகிறேன்! என்ன நடந்தாலும் அப்பா மற்றும் நான் உனக்கு எப்போதும் துணை நிற்போம் ! யாராவது உன் படத்தை அல்லது வீடியோ மூலம் மிரட்டினால், அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளச் சொல். ஏனெனில் அவரது தேவை வெறும் சதை மட்டும் தான். இது நமக்கு எந்த விதத்திலும் அசிங்கத்தை ஏற்படுத்தாது. உனக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயார் எப்போதும் உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இரு என்று அவர் அம்மா கூறியதாககூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full