தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளையும் உடமைகளையும் இழுந்து தவித்து வரும் நிலையில் பல்வேறு தொண்டு நிறுவங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

Advertisement

அதுபோக திறைத்துரையை சேர்ந்த பல்வேறு கலைஞ்சர்களும் தங்களால் முடிந்த நிதியுதவியும் பொருளுதவியையும் செய்து வரும் நிலையில் விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என பலரும் உதவி செய்தனர்.

ஆனால், அல்டிமேட் ஸ்டார் அஜித் மட்டும் இன்னும் எந்த நிதியுதவியையும் அளிக்கவில்லை என்று பலரும் குறை கூறிவந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சத்துக்கான காசோலை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

அதுபோக கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு நடிகர் அஜித் சார்பாக வர் யாருக்கும் தெரியாமல் ரூ. 5 கோடி கொடுத்திருப்பதாக ரசிகர் மன்ற முக்கிய பிரபலம் கூற அந்த வீடியோ வைரலாகி வந்தது. ஆனால், இந்த செய்தி பொய்யானது என்று அஜித்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார். மேலும், இப்படி ஒரு மனதை தாக்க கூடிய விஷயத்தில் பொய்யான தகவல் பரவுவது வேதனை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement