கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஹைதராபாத்தின் பிரபல ஓட்டலில் மும்பையை சேர்ந்த இளம் நடிகைகள் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்து அவர்களை விசாரித்ததில் அங்கு அவர்கள் தவறான தொழில் செய்து வந்தது தெரிந்தது. இதனால், இதன் பின்னர் பிரபலமான நடிகர் நடிகைகளை கொண்ட ஒரு பெரிய குழு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது.
.
அதேபோல், இன்று பெங்களூரில் உள்ள ஒரு ஸ்பா’வில் ஒரு இளம் பெண்ணை போலீசார் மீட்டனர். அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் தன் குடும்ப கஷ்டத்திற்காக ஸ்பா’விற்கு வேலைக்கு வந்துள்ளது தெரிந்தது. மேலும், ஸ்பா’வில் இருக்கும்போதே அந்த ஸ்பாவின் ஓனர் இளம் பெண்ணை வற்புறுத்தி தவறான தொழிலில் ஈடுபடுத்தியுள்ளது தெரியவந்தது.

மேலும், அந்த பெண் திடுக்கிடும் பல தகவல்களை வெளியிட்டார். இந்த தொழில் பிரபல நடிகைகள் மட்டுமல்லாது, இரண்டு பிரபலமான நடிகர்களும் உள்ளதாக கூறினார். இதனால் சினிமா உலகம் அதிர்ந்துள்ளது

Advertisement
Advertisement