ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்த உள்ளனர். ரஜினிகாந்துடன் நயன்தாரா, யோகிபாபு ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாகவே படப்பிடிப்பு காட்சிகள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாவது தயாரிப்பு தரப்புக்கும், இயக்குனருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடுமையான பாதுகாப்புகளையும் மீறி இது மாதிரி படங்கள் வெளிவரக் காரணம் படப்பிடிப்பு நடக்கும் இடம்தான் என படப்பிடிப்பு குழு கண்டுபிடித்துள்ளது.

இதையும் படியுங்க : படு மோசமாசான உடையில் நீச்சல் குளத்தில் கூத்தடித்து சந்தானம் பட நடிகை.! 

Advertisement

மும்பையிலுள்ள பிரபலமான கல்லூரி வளாகத்தில் தர்பார் படப்பிடிப்பு நடக்கிறது. அந்த கல்லூரி மாணவர்கள்தான் ஆர்வமிகுதியில் இப்படி செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனால் படப்பிடிப்பை பார்க்க கல்லூரி மாணவர்களை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் படக்குழுவினருக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கல்லூரியின் மாடிக்கு சென்ற மாணவர்கள் படப்பிடிப்பை நோக்கி கற்கள் வீசும் அளவுக்கு சென்று இருக்கிறது. இதுகுறித்து தர்பார் படக்குழு கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

Advertisement
Advertisement