பட வாய்ப்புகள் இல்லை என்றாலே நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தில் இருந்து நீங்காமல் இருந்து விடுகின்றனர். அந்த வகையில் அதே பார்முலாவை பின்பற்றி வருகிறார் நடிகை பூனம் பாஜிவா. நடிகை பூனம் பாஜ்வா, 1989ஆம் ஆண்டு ஒரு பஞ்சாபி குடும்பத்தில் மும்பையில் பிறந்தார். இவருடைய அப்பா அமர்ஜீத் சிங் ஒரு கடற்படை அதிகாரி. இவருக்கு தயா என்ற தங்கை இருக்கிறார். பூனம் பாஜ்வா தனது பள்ளி காலம் முதலே மாடலிங் செய்து வருகிறார்.

12ஆம் வகுப்பு படிக்கும் போதே பார் டைமில் மாடலிங் செய்து வெப்த இவர், 2005ல் மிஸ் புனே பட்டம் வென்றார். அதன்பின்னர் ஒரு ராம்ப்வாக் பேஷன் ஷோவில் இவரது பெர்பாமன்ஸ் பார்த்துவிட்டு தெலுங்கு இயக்குனர் ஒருவர் இவரை படத்தில் நடிக்க வைத்தார். 2005 ஆம் ஆண்டு மொடாட்டி சினிமா ‘ஏமாற’ தெலுங்கு படத்தில் தனது 16 வயதில் 12ஆம் வகுப்பு படிக்கும் போது அறிமுகம் ஆனார். தமிழில் பரத் நடித்த ‘சேவல்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தார். தற்போது 30 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

Advertisement

இதையும் பாருங்க : சூர்யா கைய புடிச்சி ‘சுக்ரியா பையானு’ சொல்லனும், இதுக்கு 10 நாள். வறுத்தெடுத்த மிஸ்கின் பட நடிகை.

முன்னணி நடிகையாக வலம் வரமுடியாததால் இரண்டாம் நிலை நடிகையாக நடித்து வந்தார். இறுதியாக இவர் தமிழ் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை 2’ மற்றும் முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. இறுதியாக தெலுங்கில் வெளியான என் டி ஆர் படத்தில் நடித்திருந்தார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அப்படி சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர் ஒருவர். நீங்கள் வெட்கமில்லாதவர். கண்ணியமான பெண்ணைப் போல நடந்து கொள்ளுங்கள். ஒரு பெண் தன் உடையால் மட்டுமே மதிக்கப்படுவாள். தயவுசெய்து கவலைப்பட வேண்டாம் அன்பே. நான் நினைத்ததைப் பகிர்கிறேன் என்று இந்தியில் கமன்ட் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்த பூனம், நீங்கள் என்னை வெட்கமில்லாதவர் என்று அழைக்கிறீர்கள் அல்லது தயவுசெய்து கவலைப்பட வேண்டாம் அன்பே என்று சொல்லுங்கள். இருப்பினும் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நான் நினைத்ததைப் பகிர்ந்து கொண்டேன் என்று இந்தியில் பதில் அளித்துள்ளார்.

Advertisement