fun panrom என்ற பிராங்க் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர்கள் சித்து மற்றும் நிஷாந்த். கடந்த சில நாட்களுக்கு வழக்கறிஞர்கள் தரப்பில், prank show என்று சொல்லக்கூடிய குறும்புத்தனமான வீடியோ எடுப்பதற்கான செயல்களால் தனி நபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக முறையிடப்பட்டது.

Advertisement

மேலும், ஒரு சிலர் இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சிக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் அதற்கும் தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞ்சர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நீதிபதிகள் prank show எனப்படும் குறும்பு வீடியோக்களுக்கும், அதனை தொலைக்காட்சிகள் வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டனர் தீர்ப்பளித்தனர்.

இருப்பினும் தடைகளையும் மீறி தற்போதும் பிராங்க் ஷோக்களை நடத்தி வருகின்றனர் சித்து மற்றும் நிஷாந்த். பிராங்க் ஷோ மூலம் இவர்கள் இருவருக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் நடித்திருந்தனர்.

Advertisement

Advertisement

மேலும், சமீபத்தில் ரியோ ஹீரோவாக களமிறங்கிய ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஊடு ராஜா’ என்ற படத்திலும் சித்து நடித்திருந்தார். கடந்த ஆண்டு தான் சித்துவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. மேலும், கடந்த மாதம் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு இனியாழ் என்று பெயர் வைத்துள்ளனர்.

Advertisement