திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களின் இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படம் குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டுமில்லாமல் இவர் இயக்கிய மூன்று படங்களிலும் ரிச்சர்ட் ரிசி தான் கதாநாயகனாக நடித்து இருந்தார்.

Advertisement

மேலும், இவருடைய அடுத்த படத்திலும் ரிச்சர்ட் ரிஷியே கதாநாயகனாக நடிப்பாரா? இல்லையா? என்று பல எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் மோகன்ஜி தனது அடுத்த படம் குறித்து சோசியல் மீடியாவில் பதித்துள்ளார். அந்த பதிவில் இவர் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக செல்வராகவனை களம் இறக்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவுலகில் இயக்குனராக வலம் வந்தவர் செல்வராகவன். இவர் இயக்கிய காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

பின் ‘சாணிக் காயிதம்’ என்ற திரைப்படத்தில் நடிகராக செல்வராகவன் அறிமுகமானார். தற்போது இவர் தளபதி விஜய்யின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும், மோகன் இயக்கத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்தின் மீது ரசிகர்கள் பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றன.

Advertisement
Advertisement