கரகாட்டக்காரன் படத்தில் கனகாவை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்து கங்கை அமரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இசையமைப்பாளராகவும், பாடகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் என பன்முகம் கொண்டு வலம் வருபவர் கங்கை அமரன். இவர் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கங்கை அமரன் 1979 ஆம் ஆண்டு வெளியான கரைகடந்த குறத்தி என்ற படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் கடைசியாக 2010 ஆம் ஆண்டு வெளிவந்த புகைப்படம் என்ற படத்தில் இசையமைத்திருந்தார். மேலும், இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் இயக்குனரும் ஆவார். பிரபு சுரேஷ் நடித்த கோழி கூவுது என்ற படத்தில் மூலம் தான் இவர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

கரகாட்டக்காரன் படம்:

அதை தொடங்கி இவர் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். குறிப்பாக, இவர் இயக்கிய கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படம் 1989ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, காந்திமதி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படம் வசூல் மழையை குவித்து இருந்தது என்று சொல்லலாம்.

Advertisement

கங்கை அமரன் திரைப்பயணம்:

இதனை அடுத்து எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, பொண்ணுக்கு ஏத்த புருஷன், வில்லுப்பாட்டுக்காரன், தெம்மாங்கு பாட்டுக்காரன் என ராமராஜனை வைத்து கங்கை அமரன் இயக்கிய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் கங்கை அமரன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கரகாட்டக்காரன் படம் குறித்து கூறியிருந்தது, நான் சினிமாவில் இருந்தாலும் இல்லை என்றாலும் எனக்கு அடையாளமாக இந்த ஒரு படத்தை சொன்னாலே போதும்.

Advertisement

கங்கை அமரன் அளித்த பேட்டி:

அந்த அளவிற்கு எனக்கு இந்த ஒரு படம் வளர்ச்சியை கொடுத்துவிட்டது. அந்த படத்தோட இரண்டாவது பாகத்தை எடுக்க நான் தயார். ஆனால், அதற்கு பலருடைய ஒத்துழைப்பு தேவை. அதற்க்கான சூழல்கள் அமையுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நேரத்தில் அந்த படத்தில் கனகாவை நான் அறிமுகப்படுத்திய கதையை சொல்ல விரும்புகிறேன். அப்போ என் வீட்டுக்கு பக்கத்தில் தான் நடிகை தேவிகாவின் வீடும் இருந்தது.

கனகா குறித்து சொன்னது:

தன் மகளை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்று தேவிகா அம்மா ஆசைப்பட்டார்கள். பின் அவரை என் பார்வையில் தெரியும்படி வைத்தார். கனகாவுக்கு பட்டுப்பாவாடை தாவணி போட்டுவிட்டு என் வீடு வழியா அடிக்கடி வாக்கிங் கூட்டிட்டு வருவார்கள். ஒரு நாள் நான் என் வீட்டுக்கு கூப்பிட்டு நானும் என் மனைவியும் பேசினோம். பின் இந்த பொண்ணு லட்சணமாய் இருக்கா என்று என் மனைவி சொன்னதால் தான் நான் கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தேன். ஆனால், அந்த படத்தில் பானுப்ரியாவை நடிக்க வைக்கணும் என்று தான் நானும் இளையராஜாவும் நினைத்தோம். அந்த படத்தோட வெற்றிக்கு கனகாவின் நடிப்பும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

Advertisement