பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கபட்ட நபர் நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி.அவரை பலர் வில்லி என்று கூறினாலும் பலர் அவர் தான் மனத்தில் பட்டதை பேசுவார் அதனால் அவரை எல்லோரும் வெறுக்கிறார்கள் என்று கூறுகின்றனர்.
அதே போன்று காயத்ரியின் சமீபத்திய ட்விட்டர் பதிவுகள் அனைத்தும் அவருக்கு நல்ல பெயரையே வாங்கித்தந்து வருகிறது.சமீபத்தில் சென்னை கேகே நகா் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி கல்லூாியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை வணிகவியல் படித்த வந்த மாணவி அஸ்வினி. நேற்று அழகேசன் என்பவரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை ட்விட் செய்துள்ள காயத்ரி அஸ்வினியை கொலை செய்த அழகேசனை இதயம் இல்லாதவர் என்றும் அரக்கன் என்றும் தனது கோபத்தை வெளிப்படித்தியுள்ளார்.மேலும் அஸ்வினி குடும்பத்தாருக்கு தனது இரங்களையும் தெருவித்துள்ளார் காயத்ரி.