தமிழில் 2003 ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது பாய்ஸ் படம். இந்த படத்தில் பல புது முக நடிகர்களை இயக்குனர் ஷங்கர் அறிமுகம் செய்தார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாகியாக ஜெனிலியா என்ற புதுமுகத்தையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார் ஷங்கர். இந்த படத்திற்கு பின்னர் இவர் தமிழில் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களில் இவரது சுட்டி தனமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் உருவாகின. தமிழ் படங்களை தவிர ஹிந்தி, தெலுங்கு,கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தனது முதல் ஹிந்தி படத்தில் நடித்த போதே இந்தி நடிகர் ரிதீஸ் தேஸ்முக் உடன் நெருக்கம் ஏற்பட்டது.பின்னர் இவர்கள் இருவரரின் காதலும் 2012 ஆண்டு திருமணத்தில் முடிந்தது. பின்னர் இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு ரியான் என்ற மகனும், 2016 ஆம் ஆண்டு ராய்ல் என்று மகனும் பிறந்தார்கள். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தார் ஜெனிலியா.சமீபத்தில் ஸ்கேட்டிங் செய்த போது விழுந்து வாரி கை எலும்பை முறித்துக்கொண்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனால் இவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்தனர்.

Advertisement

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெனிலியா தனது கணவருடன் விழா ஒன்றிற்கு சேர்ந்திருந்தா. இந்த விழாவில் பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான ப்ரீத்தி ஜிந்தா வரும்போது அவரை ஜெனிலியாவின் கணவர் வரவேற்றார். அப்போது பிரீத்தி ஜிந்தாவிடம் கொஞ்சம் நேரம் பேசிய ஜெனிலியாவின் கணவர் ஒரு கட்டத்தில் அவர் கையை பிடித்து முத்தம் கொடுத்தார். இதை அருகில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜெனிலியாவின் முகமும் மாறியது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

மேலும், கணவர் வேறு ஒரு பெண்ணிற்கு முத்தம் கொடுப்பதை பொறுக்காமல் ஒரு மனைவி என்ன செய்வார் என்று இதை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று பலரும் இந்த வீடியோவை பகிர்ந்தனர். மேலும், இந்த வீடியோ மூலம் கணவர் மீது நடிகை ஜெனிலியா எந்த அளவிற்கு காதல் வைத்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இப்படி ஒரு நிலையில் பல மாதங்கள் கழித்து இந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ள ஜெனிலியா, இந்த வீடியோவிற்கு பின்னர் வீட்டில் என்ன நடந்தது என்ற ஒரு கேலியான வீடியோவையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement