லிப்டில் சுய இன்பம் கண்ட SRM மாணவர்..!பொங்கி எழுந்த கஸ்தூரி..!

By Rajkumar · 23/11/2018
சென்னையில் பிரபல கல்லூரியான எஸ் ஆர் ஆம் பல்கலைகழகத்தில் நேற்று மாலை 3 அளவில் மழையில் நனைந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது அறைக்கு செல்வதற்காக விடுதியில் உள்ள லிப்ட்டில் சென்றுள்ளார். அப்போது லிப்டில் இருந்த மாணவர் அந்த மாணவியை கண்டு சுய இன்பம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தப்பிக்க முயன்ற போது அந்த மாணவர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் அலறி அடித்துக்கொண்டு அந்த மாணவி லிப்டில் இருந்து தப்பியுள்ளார். லிப்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை வைத்து கண்டுபிடித்ததில் அந்த மாணவர் அதே கல்லூரியில் பணிபுரிந்து வருபவர் என்றும் தெரியவந்தது. இதனால் மற்ற மாணவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டதோடு கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் செய்துள்ளனர். ஆனால், விடுதி பாதுகாவலரோ அந்த பெண் ஒழுங்காக ஆடை அணியாததால் தான் அந்த மாணவர் அப்படி நடக்க காரணம் எண்டு பொறுப்பற்ற பதிலை சொல்லியுள்ளது. மேலும், அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், காவல் நிலையத்தில் விசாரித்தால் அந்த மாணவர் மீது எந்த புகாரையும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடையை குறை கூறிய விடுதி பாதுகாவலரையும் கூறியுள்ளார் கஸ்தூரி.
Tamil Behind Talkies AMP · Quick view
View full