கோலி சோடா பட நடிகைக்கு திருமணம் ஆகி குழந்தையே இருக்கும் தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் விஜய் மில்டன் இயக்கிய “கோலி சோடா ” என்ற படத்தில் நடித்த நடிகை சாந்தினி. 1996 நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர் படித்து வளைந்தது எல்லாம் சென்னையில் தான். சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள செயின்ட் ஜான் என்ற மேல்நிலை பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

இவருக்கு கோலி சோடா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஒரு சுவாரசியமான சம்பவம்தான் . கல்லூரி படிக்கும் பொது தனது நண்பர்களுடன் தந்து வீட்டுக்கு நடந்து சென்ற இவரை சாலையில் பார்த்த கோழி சோடா படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் இவரை பின்னல் தொடர்ந்து சென்றிருக்கிறார். பின்னர் சாந்தினியிடம் போன் நம்பரை கேட்டுள்ளார் விஜய் மில்டன் இதனால் கோவமடைந்த சாந்தினி விஜய் மில்டனை இடியட் என்று திட்டி அனுப்பியுள்ளார்.

Advertisement

அதன் பின்னர் சாந்தினியின் வீட்டுக்கு சென்று சமாதானம் செய்து கோலி சோடா படத்தில் நடிக்க சம்மதம் பெற்றுள்ளார் விஜய் மில்டன். கோலி சோடா படத்தில் நடித்த சாந்தினிக்கு பல விருதுகளும் கிடைத்தது. அதன் பின்னர் விஜய் மில்டன் இயக்கிய 10 எண்றதுக்குள்ள என்ற படத்திலும் விக்ரமிற்கு தங்கையாக நடித்திரருந்தார். மேலும், ஜீவா நடித்த சீறு படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

அதன் பின்னர் கடன்ஹா 2015 வெளியான இயக்குனர் கிருஷ்ண இயக்கிய “குரங்கு கைல பூ மாலை” என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். அனால் அந்த படம் இவருக்கு எதிர்பார்த்த பெயரை ஏற்படுத்தி தரவில்லை .அதன் பின்னர் தனது படிப்பில் கவனம் செலுத்தி வந்த சாந்தினி தனது படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக வாய்ப்பை தேடிக்கொண்டிருந்தார்.

Advertisement

ஆனால், கடந்த சில வருந்திங்களாக இவரை எந்த படத்திலும் காணமுடியவில்லை. இப்படி ஒரு நிலையில் இவரரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் குழந்தையே இருக்கிறது. சமீபத்தில் தான் தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறது. அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன் இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Advertisement