நடிகை கவுதமி ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவருடைய முழு பெயர் கவுதமி தடிமல்லா. இவர் 1987ஆம் ஆண்டு தயமாயுடு என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். இவர் ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி ஆவார். அதன் பின்னர் தமிழ் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

Advertisement

1988ஆம் ஆண்டு ரஜினியின் குருசிஷ்யன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதற்கு அடுத்த வருடம் கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்தார். அங்கு ஆரம்பித்தது கமல்-கவுதமி நட்பு.

அதன் பின்னர் 1998ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற தொழில் அதிபருடன் காதலித்து திருமணம் செய்துகொண்டார் கவுதமி. ஆனால் 1999ஆம் ஆண்டு இருவரும் தகருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர்.

Advertisement

Advertisement

இந்த தம்பதியருக்கு சுப்புலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார். அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு முதல் தனது நண்பர் கமலுடன் காதல் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஓரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த ஆண்டு பிரிந்து விட்டனர். இதற்கு காரணம் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. தனது மகளின் எதிர்கால வாழ்க்கை குறித்து அக்கரை கொண்டு இந்த முடிவை எடுத்ததாக கவுதமி கூறினார்.

தற்போது கவுதமி அவரது மகள் சுப்புலட்சுமியுடன் இருக்கிறார். கமல் தனது வாழ்க்கையை கையில் எடுத்து அரசியல் பிரவேசம் செய்துள்ளார்.

Advertisement