மெர்சல் 2 படத்தில் ஒப்பந்தம்- தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தந்த மெர்சல் அதிர்ச்சி !

By Ajju · 2/11/2017
இந்த வருடத்தின் மிகப்பிரம்மாண்டமான வெற்றியைப் படைத்து 200 கோடிக்கு மேல் வசூல் செய்து திரையில் இன்னும் கூட்டம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், படத்திற்கு வந்த பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைப் பேச்சுகள், பெரிய ப்ரோமசனாக அமைந்தது. இப்படிப்பட்ட படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க எந்த தயாரிப்பாளருக்குத்தான் ஆசை இருக்காது. அப்படி ஒரு அறிவிப்பு வந்தால் தயாரிப்பாளர் கூட்டம் க்யூவில் நிற்க ஆரம்பித்துவிடும். அதே ஆசை தான் மெர்சல் படத்தை தயாரித்து வெற்றிகரமாக திரைக்கு கொண்டு வந்த தேனாண்டாள் பிலிம்சின் தலைமை செயல் அதிகாரி ஹேமா ருக்மணிக்கும் வந்துள்ளது.அவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் நீங்கள் யாராக மாற விரும்புகிறீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, இதையும் படிங்க: விஜய்னா யாரு? ஒரே வார்த்தையின் பதில் அளித்த காஜல் – என்ன வார்த்தை தெரியுமா தளபதி விஜயாக மாறி மெர்சல் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தேனான்டாள் பிலிம்சுடன் ஒப்பந்தம் செய்வேன், மேலும், தமிழ்நாட்டில் டிஸ்னிலேன்ட் ஓப்பன் செய்ய அந்நிருவனத்துடன் கையெழுத்திடுவேன் எனக் கூறினார். மெர்சல் படத்தின் இரண்டாம் பாகம் கற்பனையாக இருந்தாலும் அந்த ஆசை தயாரிப்பாளருக்கு இருக்கத்தான் செய்கிறது. படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய பேச்சுக்கள் வந்தால் தேனாண்டாள் பிலிம்ஸ் முதல் ஆளாக தளபதி விஜய் ஆபீசில் நிற்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிகிறது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full