காயத்திரி வீட்டை விட்டு வெளியேறிய பிறகு எதிர்கொள்ள போகும் அதிர்ச்சிகள் !

By Tamil Selvam · 20/8/2017
இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து காயத்திரி, கமல் முன்னிலையில் வெளியேற்றப்படுவது இன்றைய முன்னோட்ட விடியோவை பார்த்த பிறகு உறுதியாகிவிட்டது. நேரில் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கும் பார்வையாளர்களின் கை தட்டல்களே அதற்கு சாட்சி. காயத்திரி  வெளியில் வந்ததும் அவர் எதிர்கொள்ள போகும் மூன்று முக்கிய அதிர்ச்சிகள்
  1. தொலைத்த பெயர்
  2. வெளியில் தலை காட்ட முடியாத நிலை
  3. ஓவியா புகழ்
தொலைத்த பெயர்: நிகழிச்சிக்கு அவர் செல்லும் முன் அவருக்கும் அவரது குடுபத்திற்கம் சமுதாயத்திலும் சரி சினிமா துறையிலும் சரி நற்பெயர் இருந்தது உண்மையே. ஆனால் இப்போது அவரது பெயர் அனைத்து இடங்களிலுமே நாசமாகிவிட்டது. அது எந்த அளவிற்கு நாசமாகி உள்ளது என்பது அவர் வெளியில் வந்து பிறகு தான் அவருக்கு தெரியும். வெளியில் தலை காட்ட முடியாத நிலை: அவர் கூறிய "சேரி" "மூஞ்சி மொகர" போன்ற வார்த்தைகள் வெளியில் பெரும் கண்டனத்தை ஏற்கனவே பெற்றுவிட்டது. இதற்காக கமல் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு இருக்க இவற்றையெல்லாம் காயத்திரி எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார் என்பது பதெரியவில்லை. ஓவியாவின் புகழ் இவை அனைத்தைவிட அவரால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று ஓவியாவின் புகழ். ஓவியாவின் புகழ் தற்போது உச்சத்தை தொட்டுவிட்டது. பல வெற்றி படங்களை கொடுத்த நடிகைக்கு இணையாக ஓவியாவின் புகழ் தற்பொழுது தமிழகத்தில் நிலவுகிறது. இதை காயத்திரியால் நிச்சயம் சகித்துக்கொள்ள முடியாது. அவர் வெளியில் வந்து அனைவரையும் "செஞ்சுருவன்" என்று  ஆரவ்விடம் கூறினார். அவர் வெளியில் வந்தால் தான் தெரியும் அவரை ஏற்கனவே அனைவரும் வச்சு செஞ்சுட்டு இருக்காங்க என்று.
Tamil Behind Talkies AMP · Quick view
View full