நடிகை மஞ்சுமா மோகன் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.பின்னர் சென்ற ஆண்டு கவுதம் வாசுதேவன் இயகத்தில் சிம்பு நடிப்பதில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Advertisement

கேரளாவில் பிறந்த இவர், தனது 5 வயதில் ‘கலியூஞ்சல்’ என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த ‘ஒரு வடக்கன் செல்பி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பிறகு இவர், விக்ரம் பிரபு நடித்த சத்திரியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த இப்படை வெல்லும் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். தனது சமூக வலைத்தளங்கில் ஆக்டிவாக இருக்கும் மஞ்சுமா மோகன் சமீபத்தில் தனது தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisement

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தோழியுடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகை மஞ்சுமா மோகன். அந்த புகைப்படத்தில் பள்ளி சீருடையில் மிகவும் அழகாக இருக்கிறார் மஞ்சுமா. இதோ அந்த புகைப்படம்.

Advertisement
Advertisement