சமீபகாலமாகவே சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றனர். வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்கள் மக்கள் மத்தியில் பாப்புலராகி வருகின்றனர். பொதுவாகவே சோசியல் மீடியாவில் சின்னத்திரை பிரபலங்கள் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்கள். இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பேஸ்புக் என ஒரு சமூக வலைத்தளங்களையும் விடாமல் அடிக்கடி எடுத்த போட்டோக்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது லைவ் செஷன் நடத்தி ரசிகர்களுடன் கலந்துரையாடியும் வருகின்றனர்.

அந்த வகையில் சின்னத்திரை ஹீரோயின்களில் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருப்பவர் நடிகை ஹிமா பிந்து. ஹிமா பிந்து ஆந்திராவை சேர்ந்தவர். இவர் பீகாம் முடித்துள்ளார். தாத்தா, பாட்டி, அப்பா என அனைவருமே சினிமாவில் பிரபலமானவர்கள் என்பதால் இவருக்கு இயல்பாகவே நடிப்பு மீது அதிக ஆர்வம் வந்துவிட்டது. இவர் சிறு வயதிலிருந்தே ஆக்டிங்,டான்ஸ் என பல துறைகளில் ஆர்வம் காட்டி வருகின்றார். மேலும், இவருக்கு படிக்கும்போதே திரைப்படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால், பெற்றோர்கள் இவருக்கு ரெட் சிக்னல் கொடுத்து விட்டார்கள். பின் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு படத்தில் நடிப்பதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : ‘திமுக’ வால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை நிறுத்த முடியாது – பிக் பாஸ் நடிகை ஆவேச ட்வீட்.

Advertisement

அதனால் இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதற்காக ஹிமா நடிக்க ஒப்பந்தம் சொன்னார். இவர் நடித்த முதல் படம் ’ஐ.ஆர் 8’. முதல் படத்திலே இவர் கதாநாயகியாக அறிமுகமானார். இதற்குப் பின் தான் இவர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் கலர்ஸ் தமிழில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே என்ற சீரியலில் சஹானா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும், மராத்தியில் ஹிட்டான ஜிவ் ஜலா ஏடே பீசா சீரியலின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் இந்த சீரியல் 600 எபிசோடுகளை கடந்து தற்போது இந்த சீரியல் இரண்டாவது பாகத்தை தழுவி உள்ளது.

இந்த இரண்டாவது சீசனிலும் ஹிமா பிந்து தான் ஹீரோயினாக நடிக்கின்றனர். இந்த சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் ஏன் இவர் இன்னும் வெள்ளித்திரை பக்கம் போகவில்லை? என்று பலரும் கேட்டு வருகின்றனர். இதற்கு தற்போது ஹிமா பிந்து பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. நான் எதிர்பார்க்கும் கதாபாத்திரம் கிடைத்துவிட்டால் உடனே நடிக்க தொடங்கி விடுவேன். ஏற்கனவே நிறைய வாய்ப்புகளை விட்டு விட்டேன் இனிமேல் எந்த வாய்ப்பையும் விட மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement
Advertisement