பிரேம்ஜியின் திருமணத்திற்கு செல்லாமல் பிரபல நடிகர் மகனின் திருமணத்திற்கு இளையராஜா சென்றிருக்கும் தகவல் தான் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் பிரேம்ஜி அமரன். இவர் சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட் கங்கை தம்பி ஆவார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகரும் ஆவார்.

பல வருடங்களாகவே பிரேம்ஜிக்கு திருமணம் எப்போது? ஏன் நடக்கவில்லை? என்று பல கேள்விகள் கேட்டு இருந்தார்கள். தற்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்கள். சமீபத்தில் தான் பிரேம்ஜிக்கு திருமணமாகி இருக்கிறது. இவர் இந்து என்ற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டார். இவர் சேலத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இது காதல் திருமணம். இந்து தான் முதலில் பிரேம்ஜி இடம் காதலை சொல்லி இருக்கிறார்.

Advertisement

பிரேம்ஜி திருமணம்:

அதற்குப் பிறகுதான் இருவருமே வீட்டில் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி இருக்கிறார்கள். மேலும், இவர்களின் திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருந்தார்கள். திருமணத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் வீடியோகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள் . இப்படி இருக்கும் நிலையில் பிரேம்ஜி திருமணத்தில் நெருங்கிய உறவினர்களாக இளையராஜா, யுவன் சங்கர் ராஜா கலந்து கொள்ளவே இல்லை.

திருமணத்தில் கலந்து கொள்ளாத பிரபலங்கள்:

பிரேம்ஜிக்கு சொந்த பெரியப்பாவான இளையராஜா, பிரேம்ஜியின் திருமணத்திற்கு செல்லவில்லை. இது குறித்து பலருமே கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆனால், சரியான தகவல் தான் வெளியாகவில்லை. இந்த நிலையில் பிரேம்ஜியின் திருமணத்திற்கு செல்லாமல் பிரபல நடிகர் மகனின் திருமணத்திற்கு இளையராஜா சென்றிருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் சார்லி.

Advertisement

இளையராஜா வராத காரணம்:

இவருடைய மகனுக்கு பிரேம்ஜி திருமணம் நடந்த அடுத்த நாளே நடந்திருக்கிறது. இந்த திருமணத்தில் இளையராஜா கலந்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து நெட்டிசன்கள், இளையராஜாவுக்கும் கங்கை அமரன் குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை இருப்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இருவருமே சேர்ந்து விட்டார்கள், எந்த பிரச்சனையும் இல்லை என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், இளையராஜா வன்மத்தை வைத்து கொண்டு தான் இருக்கிறார்.

Advertisement

யுவன் வராத காரணம்:

அதேபோல் யுவன் சங்கர் ராஜாவும் பிரேம்ஜி திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அந்த சமயத்தில் யுவன் துபாயில் இருப்பதாக சொல்லப்படுகிறது. என்னதான் வேலையாக இருந்தாலும் தம்பியின் திருமணத்திற்கு வந்திருக்கலாம். தம்பியின் மீது யுவனுக்கு என்ன வெறுப்பு? என்று தெரியவில்லை. இன்னும் சிலர் அவர் மதம் மாறிவிட்டதால் தான் கோவிலில் பிரேம்ஜி திருமணம் நடந்ததற்கு வரவில்லை என்றெல்லாம் கூறுகிறார்கள்

Advertisement