இளையராஜா பாடல்கள் காப்புரிமை தொடர்பாக எக்கோ நிறுவனம் வைத்திருக்கும் வாதங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. இவர் 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை படங்களில் இசைத்து வருகிறார். இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி இருக்கும் நிலையில் இளையராஜா உடைய 4500 பாடல்களை எக்கோ அண்ட் அகி ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால், இந்த ஒப்பந்தம் 2014 ஆம் ஆண்டில் முடிந்துவிட்டது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தன்னுடைய பாடல்களை எக்கோ, அகி ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்துகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisement

இளையராஜா தொடர்ந்த வழக்கு:

மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளரிடம் உரிமை பெற்ற பிறகு இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை இருக்கிறது. இளையராஜாவுக்கும் இசை பாடல்கள் மீதும் தனிப்பட்ட தார்மீக சிறப்புரிமை இருக்கிறது என்று 2019 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இருந்தும், இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

எக்கோ-அகி நிறுவனம் வாதம்:

இதை விசாரித்த நீதிபதி, நீதிமன்றம் உத்தரவின் மீது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்கள். அதோடு இளையராஜா அளித்த புகார் மத்திய குற்றப்பிரிவு சார்பில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது நீதிபதி, இந்த வழக்கு சிவில் பிரச்சனை. நீதிபதி, புகார் அளிக்க முடியாது என்றும் கூறியிருந்தார்கள். பின் எக்கோ, அகி நிறுவனம், பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்கள்.

Advertisement

இளையராஜா வாதம்:

அந்த மனுவில், படத்தின் காப்புரிமை தயாரிப்பாளர்களிடம் உள்ளது. இசையமைப்பாளர் பாடலுக்கு ஊதியம் பெற்ற பிறகு அனைத்து உரிமைகளையும் இழந்து விட்டார். காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா? என்றால் கிடையாது. இளையராஜா தன்னை எல்லோருக்கும் மேலானவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு இளையராஜா, ஆமாம்! நான் எல்லோருக்கும் மேலானவன் தான் என்று கூறியிருந்தார். இந்த வாதங்களை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.

Advertisement

விசாரணையில் எக்கோ:

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது எக்கோ, சம்பளம் கொடுத்து இசையை தயாரிப்பாளர் வாங்கிவிட்டார். அதனுடைய முதல் காப்புரிமை அவருக்கு தான் சொந்தம். பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளருடன் எந்த ஒப்பந்தமும் இசையமைப்பாளர் இளையராஜா செய்து கொள்ளவில்லை. இதனால் அவருக்கு பாடல் மீது எந்த உரிமையும் இல்லை. இசையை திரித்தினாலோ, பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டுமே அவருக்கு உரிமை இருக்கு. இதனால் தான் ஏ ஆர் ரகுமான் பதிப்புரிமையை யாருக்குமே கொடுப்பதில்லை. ஆனால், இளையராஜா உரிமையை தயாரிப்பாளருக்கு கொடுத்துவிட்டார். அவர் பாடல் உரிமையை கேட்க முடியாது என்று கூறி இருக்கிறார். இதை அடுத்து இளையராஜா தரப்பு வாதத்திற்காக விசாரணையை நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.

Advertisement