Ind Vs Nz : நாளை மீண்டும் மழை வந்தால் என்ன நடக்கும் தெரியுமா.?

By ·

உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி போட்டி இன்று(ஜூலை 9) மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளைஇழந்தது. இந்நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.

உலக கோப்பை நாக் அவுட் போட்டிகளுக்கு ரிசர்வ் டே அதாவது கூடுதலாக ஒரு நாள் விளையாட ஒரு சலுகை உள்ளது. எனவே, நாளை நியூசிலாந்து அணி விடுபட்ட ஓவரான 46.1 ஒவேரில் இருந்து துவங்கும். ஒருவேளை நாளையும் மழை பெய்தால் இந்திய அணி குறைந்தது 20 ஒவர்களாவது விளையாட வேண்டும்.

அப்படியும் இந்திய அணி மழையின் காரணமாக 20 ஓவர்கள் விளையாட முடியாமல் போனால் இந்திய அணி புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் இருப்பதால் இந்திய அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விடும். எனவே, நாளை மழை குறுக்கிட்டால் இந்திய அணி உலக கோப்பை இறுதி போட்டிக்கும் தகுதி பெற்று விடும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full