தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாகவே அடல்ட் காமெடி படங்கள் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஹர ஹர மஹாதேவிக்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். அதன் பின்னர் கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘ படத்தின் மூலமும்ம் ஒட்டுமொத்த இளசுகளையும் கவர்ந்தார். இந்த திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சந்தோஷ் இருட்டு அறையில் முருட்டு குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.ஆனால், இந்த படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்க மறுப்பு தெரிவித்ததால் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பக்கத்தில் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமாரே ஹீரோவாக நடிக்கிறார்.

Advertisement

மேலும், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் முதல் பாகத்தில் நடித்த சாம்ஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.மேலும்,முதல் பாகத்தில் நடித்த யாஷிகா இந்த படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்டதால் அவருக்கு பதிலாக இந்த படத்தில் இளம் நடிகை ஷாலு ஷம்மு நடித்து வருகிறாராம். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் இயக்குனர் சந்தோஷ் இந்தப் படத்தில் அவருடைய நண்பராக நடித்துள்ள டேனி இருவரும் இந்த யானையும் வாழைப்பழத்தை வைத்து கொண்டு நின்று இருக்கிறார்கள்.

இந்த போஸ்டரை கண்டு பலரும் இந்த படத்தின் இயக்குனரைகடுமையாக விமர்சிக்க தொடங்கினார்கள். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள இந்த படத்தின் இயக்குனர் சந்தோஷ் இடம் இந்த படத்தின் போஸ்டரை பார்த்து பெண்களுக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் பெண்கள் அதுபோல நினைத்தால் அவர்கள் சொல்லட்டும். பெண்கள் சார்பாக பேசுவதை இப்போது நிறுத்துங்கள். அவர்களுக்கு குரல் கொடுக்க பலம் இருக்கிறது. அவர்கள் அதை பேசட்டும். நீங்கள் உண்மையில் முதிர்ச்சியான நபர் என்றால் மட்டுமே இந்த படத்தை வந்து பாருங்கள் என்று கூறி இருந்தார்.

Advertisement

மேலும் பேசிய அவர், என்னுடைய குடும்பத்தார் இதைப் பற்றி என்னிடம் கேட்டிருக்கிறார்கள் நான் அவர்களிடம் நான் கொலை மற்றும் கற்பழிப்பு பற்றியோ அல்லது ஊழல் பற்றிய படம் எடுக்கவில்லை என்று கூறியிருந்தேன். அதேபோல ஹர ஹர மகாதேவகி படத்திற்கு முன்னால் இந்தியாவில் எந்த ஒரு கற்பழிப்பு வழக்கும் பதிவு ஆகவில்லையா. என்ன ஒரு சில நடிகர்கள் குடிக்க வேண்டாம் என்ற படத்தில் செல்கிறார்கள் அதற்காக நாம் குடிக்காமல் இருப்போமா என்று கூறியிருந்தார். அதேபோல சூப்பர் டீலக்ஸ் படத்தை மறைமுகமாக சாடிய சந்தோஷம், அந்த படத்தில் ஒரு மனைவி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்கிறார். மேலும் அவருடைய கணவரை கொலை செய்துவிட்டு அதை மறைக்க பார்க்கிறார். இதை விடவா நான் கூறும் இரட்டை வசனங்கள் தவறாக தெரிகிறது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Advertisement
Advertisement