கடந்த சில மாதத்திற்கு முன்னர் சுந்தர் சி நடிப்பில் வெளியான இருட்டு படத்திலும் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்து தமிழ் சினிமா ரசிகர்களை தனது அழகால் கட்டிப்போட்டவர் நடிகை சாக்ஷி சவுத்ரி. 1993 ஆம் ஆண்டு உத்தரகண்ட்டில் பிறந்தவர் மாடல் அழகியான சாக்ஷி சவுத்ரி. 2011 ஆம் நடைபெற்ற மெகா மாடல் அழகி போட்டியில் வென்ற இவர் தெலுங்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘பொட்டுகாடு’ என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் பல தெலுகு படத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் தமிழுக்கு ஒன்று புதிதல்ல இவர் ஏற்கனவே, சரண் இயக்கத்தில் வினய் நடிப்பில் வெளியான ‘ஆயிரத்தில் இருவர்’ படத்திலும் இவர் நடித்துள்ளார்.

அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு இருட்டு படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதே போல இந்த படத்தின் மூலம் சுந்தர் சி அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வேறு ஒரு இயக்குனர் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் நடிகை சாக்ஷி சவுத்ரி, சுந்தர் சியுடன் இணைந்து ரொமான்ஸ் செய்துஇருந்தார் . அதிலும் இவர்கள் இருவரும் செய்த லிப் லாக் சீன் எல்லாம் வேற லெவல்ல இருந்தது என்று கூட சொல்லலாம்.

Advertisement

இருட்டு படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்பு இல்லை என்றாலும் தற்போதும் தெலுங்கில் மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கவர்ச்சி பேர்வெழியான இவர், சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய வீடியோ காட்சிகளை பதிவிட்டார். அதனை பார்த்து விட்டு ஒரு இரவுக்கு ஒரு கோடி தருகிறேன் என்று பலரும் இவரை தொடர்பு கொள்கிரார்களாம்.

ஆனால், தான் விற்பனைக்கு அல்ல என்று நடிகை சாக்ஷி சவுத்ரி வீடியோ மூலம் பதிலளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது போக பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது, இருட்டு படத்தின் லிப் லாக் சீனை நீங்கள் வேற யாருடன் செய்ய ஆசைப் படுகிறீர்கள் என்று கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் நடிகை சாக்ஷி சௌத்ரி அவர்கள் ‘தளபதி விஜய்’ தான் என்று கூறி இருந்தார். இந்த ஒருபுறம் இருக்க அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிக் ஏற்றி வருகிறார் ஷாக்சி.

Advertisement
Advertisement